Monday, 19 September 2011

FB STATUS..கிறுக்கல்கள்....

கவிதை எழுத ஆசையுண்டு..
கை வராத நண்பர்கள் எல்லாம்..
ஒற்றை சொல் கவிதை எழுதலாம்..
உங்களவள் பெயர் எழுதி..
காலை வணக்கம்...கைகூடட்டும் இன்றைய ஆசைகள்.. எல்லாம்!

நீ சிக்கனமாய் சிரித்த போதும்..
செலவாளி நான் முழு மனதையும் கொடுத்து!!!

சொன்ன வார்த்தைகளை..
சொல்ல நினைத்து..சொல்லாத வார்த்தைகளை
அசைபோட்டு.. ஆசையாய் எழுத்தில் வடித்து
அருமையான கவிதையாய் ஆசையாய்
உன்னிடத்தில் தரும் போது..
எழுத்து பிழை திருத்தி திரும்ப தருகிறாய்..
என் காதல் பிழையாகுமோ..பிழைக்குமோ???

மாறாத விதி.. மறதி..
அதில் விதி மாறலாய்.. முழு மதி அவள் முகம்!
மூன்று அமாவாசை கடந்த பின்னும்...
பௌர்ணமியாய்.. என் மனதில் அவள்..
2ம் சந்திப்பில் புருவம் நெறித்து நீ பார்க்கையில்..
விதி செய்த சதி புரிந்தது!!!

FB STATUS..கிறுக்கல்கள்

திருட்டு கொடுப்பதில் கூட இன்பம்..
திருடியாய் நீ இருப்பதால்..
மொத்தமும் கொடுக்க சித்தமாயிருந்தேன்...
இதயம் மட்டும் போதுமென்கிறாய்.. இதய திருடி!

கொட்டி தீர்ந்தது மழையா.. அவளா??
ஒரு முறை கூடி கொட்டும் மழை போல்..
ஒவ்வொரு நாளும் கொட்டி தீர்க்கிறாய்
உன் ஆசையையும் கோபங்களையும்...
தொலை பேசி மூலம் ஒரு முறை மட்டும்!!!

உலகில் மிக விரும்பும் விடயம் எது...
அம்மா..
காதல் மனைவி..
அற்புத குழந்தை..
நட்பு
கவிதை..
இப்படி என் வரிசையில் எங்கும் இலாமல்..
அனைத்தையும் பின் தள்ளும் " பணிசுமை"
முதலிடத்தில் ...
முதலிடத்தில் இருப்பதாய் எண்ணி ஏமாறும் இரு பெண்கள்??!!!