நான் பேசுகிறேன்..
கனவுகளை விதைத்து...
காலத்தை தொலைத்தவன் பேசுகிறேன்..
நீர் பாய்ச்சி..
நெல் விதைத்தோம்
குருதி பாய்ச்சி
கனவுகள் விதைத்தோம்
மானம் காக்க..
இளமை தொலைத்தோம்
மொழி காக்க ..
பழி ஏற்றோம்..
கொலைகள் உண்டு..
களவுகள் இல்லை..
கள்ள தோனிகள் உண்டு..
காமவெறி இல்லை..
முப்படை உண்டு..
மூன்றாம் படையுமுண்டு
அதில் ஐந்தாம் படையுமுண்டு..
காவல் நிலையம் அமைத்தோம்..
கல்வி நிலையம் அமைத்தோம்..
காந்தியின் கனவு.. நடு இரவில் பெண்கள்
நிறைவேற்றியது நாங்கள்..
கூடு தேசம் கட்டி ..
வாழ்ந்து வந்தோம்
வல்லூருகள்..ஒன்றினைந்து
தூக்கனாங்கூட்டை துண்டாடியது
முள்ளில் மலர்ந்த தேசம்
முள்ளி வாய்காலில் முடிந்தது
வீழும் அலைகள் எழுமென்பார்..
வீரம் விதைகப்பட்டதென்பார்..
தலைவன் வருவானெம்பார்..
தலையெழுத்து மாறுமென்பார்
அவரை விதைத்து..
சுரை முளைக்குமென்பார்..
கனவை விதைத்து..
நிஜம் நடக்கும் என்பார்..
குருத்துகள்..
களையெடுக்கப்பட
கலாச்சாரம் கெடுத்து
களையாக மாற்றப்பட
சிங்கள விதையில்
தமிழ் வளர்வெதப்படி..
உதிரத்தில் குழப்பமானபின்
உணர்வுகள் மாறுமெப்படி..
தொப்புள் கொடி உறவுகள்..
வெட்டி விட்ட பின்
அகதியாய் சென்று..
செல்வ சீமானாய் மாறியபின்
ஈழமென்றும்.. கனவென்றும் கதைப்பார்கள்
இங்கடை வந்து கடினப்பட தயாராய் யாருண்டு??
எங்களின் குருதிக்கு.
மெழுகவர்த்தீயில் .. அஞ்சலி
இனுமும் நாங்கள் காவலர்களே
எங்களால் சிலர் பிழைக்கும் வரை
எங்களின் கனவுகள்..
காயப்படலாம்.. களங்கபடலாமா??
உலகம் விழிக்கும் போது..
நிரந்தர நித்திரையில்.. யாம் அனைவரும்!!
கோடி நன்றிகள் எதிரிக்கு..
இதை காணாவெட்டாமல்..எமன்பதம் சேர்த்ததற்கு!!