Wednesday, 23 January 2013

வலி...மன வலி

நீ தந்த வலியில்..
கரம் தலை தாங்க கவிழ்ந்திருந்தேன்..
கண்கள் ஏனோ கட்டுபாடை தொலைத்து
கண்ணீர் முத்தாய் என் பலகையெங்கும்..
நீர் திவளைகளை..ஒன்றினைத்து
உன் பெயர் எழுதி முடித்தது...
என் விரல்கள்-அனிச்சையாய்???!!!

மௌனமழை...

சிறு தூறல் மழையா..
பெரு வெள்ள அடை மழையோ..
தெரிவதே இல்லை...
கரு மேகம்.. பொழியும் வரை!

கட்டுக்கடங்கா அன்பா..
காட்ட முடியாத வெறுப்போ..
விளங்க முடியா..
உன் மௌனம்!!!

என் வார்த்தைகள்..
வட்டிக்கு வாங்கும் ஏழையாய்..

உன் மௌனம்.. 
குபேரன் பேழையாய்.. கணக்கிலடங்கா

புயல் காற்று வெள்ளத்தில்..
ஆல மரம்.. பிழைத்திருக்கும்..
நாணலும் ..பிழைத்திருக்கும்..

நானோ
தனியே நிற்கும் தென்னைமரம்..
எனக்கு முட்டு கொடுப்பதெல்லாம்.. வாழை கன்றுகள்

சீக்கிரம் பெய்துவிட்டு போ..
சிந்திப்பதை விட.. அதனை சந்திப்பதே மேல்!!!

Friday, 18 January 2013

காலம்

காலங்கள் புரட்டி போடும் கடல்கள்...
மலைகள் மண் மேடாய் மாறி போகும்...
காடுகள் .. கடுகளவாய்
வனாந்திரங்கள்..பாலை வனமாய்
மனித குலம் நசித்து போகும்
கடல் பொங்கும்..
ஆழி சூழும் இவ்வுலகில்..
கடைசியாய் விதைத்து போகும்..
நல் நம்பிக்கை ஒன்றை..
மீண்டு விடும் மீண்டும் இவ்வுலகு!!??

காலம்..வரும்

காலம் காத்து கொண்டேயிருக்கிறது...
காயப்படுத்துவதற்கு...
கரை தொட அலைகள் வந்தே தீரும்..
அதில் தொலந்தவை வருமா அறிகிலேன்?
காயங்களுக்கு மருந்துகள் கிட்டலாம்..
ஆனால் தழும்புகள் மறையுமா?
குயிலின் இசை அழகாய்...
அதிலுள்ள சோகம் புரியாமலே??
துவண்டு விட்ட தோள்களே..
இருண்டு விட்ட கண்களே..
அயர்ந்து விட்ட மனமே..
ஏறி இறங்கினால்தான் நீர் வரும் ஏற்றத்தில்..
இருளுக்கு பின்னும் வருகிறது வெளிச்சம் முற்றத்தில்
தொலைத்துவிட்ட நொடிகள் கிடைப்பதில்லை
காயப்பட்ட மனம் மறப்பதில்லை..
இவை மறுப்பதற்கில்லை..
ஆனாலும் இவனிதயம் இறப்பதற்கில்லை..
ஒரு நாள் மழைக்கு காத்திருக்கும்...பாலை மரமாய்
ஒரு நாள் வரும் விடியலுக்காய்...காத்திருப்போம்!!

Tuesday, 1 January 2013

மழை நினைவு..

வருடத்தின் ஒரு மழை நாள்
ஒரே மழை நாள்
அனுபவிக்க ஆசையாய்
விட்டு விட்டு சொட்டு சொட்டாய்
இமை மூடி ரசித்த வேளையில்
வெறுப்புற்று .. அறை ஒதுங்கினேன்
எனை நனைத்திட்ட ஒவ்வொரு துளியும்
உன் கரம்பிடித்து நனைந்திட்ட நினைவில் நனைக்கிறது!

மாற்றம்..

நான் உன்னிடம்..
நடை மாற்று..
உடை மாற்று..
இன்னும் அதிகம் வசீகரிப்பாய் என்றேன்

எனை பற்றி என்றேன்..
நீண்டது சிந்தனையும் மௌனமும்..
ஊக்கினேன் எனை மாற்றி கொள்ள தயாராய்

எதையும் பிரித்தறிய முடியவில்லை..
எல்லாமும் அழகு என்றாய்

இல்லையடி.. உன்னில் மாற்றம் தேடும்
மனப்பிழை அழகில்லையடி என்றேன்

எனை அழகாக்கவே..
அதிகம் காதலிக்கவே சிந்திக்கும்...
மனமும் மிகு அழகு என்றாய்..

யாரில் மாற்றம் வேண்டும்???

கனவுகளை தொலைத்த கண்கள்..


நான் பேசுகிறேன்..
  கனவுகளை விதைத்து...
காலத்தை தொலைத்தவன் பேசுகிறேன்..

நீர் பாய்ச்சி..
நெல் விதைத்தோம்
குருதி பாய்ச்சி
கனவுகள் விதைத்தோம்

மானம் காக்க..
இளமை தொலைத்தோம்
மொழி காக்க ..
பழி ஏற்றோம்..

கொலைகள் உண்டு..
களவுகள் இல்லை..
கள்ள தோனிகள் உண்டு..
காமவெறி இல்லை..

முப்படை உண்டு..
மூன்றாம் படையுமுண்டு
அதில் ஐந்தாம் படையுமுண்டு..

காவல் நிலையம் அமைத்தோம்..
  கல்வி நிலையம் அமைத்தோம்..
காந்தியின் கனவு.. நடு இரவில் பெண்கள்
நிறைவேற்றியது நாங்கள்..

கூடு தேசம் கட்டி ..
வாழ்ந்து வந்தோம்
வல்லூருகள்..ஒன்றினைந்து
தூக்கனாங்கூட்டை துண்டாடியது

முள்ளில் மலர்ந்த தேசம்
முள்ளி வாய்காலில் முடிந்தது

வீழும் அலைகள் எழுமென்பார்..
வீரம் விதைகப்பட்டதென்பார்..
தலைவன் வருவானெம்பார்..
தலையெழுத்து மாறுமென்பார்

அவரை விதைத்து..
சுரை முளைக்குமென்பார்..
கனவை விதைத்து..
நிஜம் நடக்கும் என்பார்..

குருத்துகள்..
  களையெடுக்கப்பட
கலாச்சாரம் கெடுத்து
களையாக மாற்றப்பட

சிங்கள விதையில்
  தமிழ் வளர்வெதப்படி..
உதிரத்தில் குழப்பமானபின்
உணர்வுகள் மாறுமெப்படி..

தொப்புள் கொடி உறவுகள்..
வெட்டி விட்ட பின்
அகதியாய் சென்று..
செல்வ சீமானாய் மாறியபின்
ஈழமென்றும்.. கனவென்றும் கதைப்பார்கள்
இங்கடை வந்து கடினப்பட தயாராய் யாருண்டு??


எங்களின் குருதிக்கு.
மெழுகவர்த்தீயில் .. அஞ்சலி
இனுமும் நாங்கள் காவலர்களே
எங்களால் சிலர் பிழைக்கும் வரை

எங்களின் கனவுகள்..
காயப்படலாம்.. களங்கபடலாமா??

உலகம் விழிக்கும் போது..
நிரந்தர நித்திரையில்.. யாம் அனைவரும்!!
கோடி நன்றிகள் எதிரிக்கு..
இதை காணாவெட்டாமல்..எமன்பதம் சேர்த்ததற்கு!!

மழை..சாரல்

பெய்து விட்டு..போயேவிட்டது மேகம்
சாரல் நிற்கவில்லை மனமதில்
கிழவிக்கு ஒப்பனை போல்
கழுவிவிடப்பட்டு பழைய கட்டிடங்கள்
குடை மறந்த அவளை
நனைத்துவிட்டு போனாய்
நனைந்துவிட்ட பாகங்களை பார்த்துவிட்டு
நடுக்கமேவந்து விட்டது எனக்கு
நல்ல வேளை சீக்கிரம் விலகி போனாய்
நடுக்கலோடு நின்றது போனது!!!

இதய சிதறல்

சிறுக சிறுக அடித்தால் சிதறிவிடும் 
எந்த பாறையும்.. தெரிந்துதான்
இதயத்துடிப்பில் ஒளித்தாய் உன் நினைவை
அடித்து அடித்து 
உடைகிறது என் இதயம்.. உன் நினைவுகளால்!!