Wednesday, 16 February 2011

கோலம்..

மனைவியின் கைவண்ணம்..

கோலமாய்..எனை வரைவாயா என்றேன்..

துதிக்கை நீக்கி விட்டால் நீங்கள்தான் என்றாள்??!!!

சிரிக்க எழுதிவிட்டாலும்..

சிந்திக்கிறேன்..பல நாளாய்

அவளை பாராட்டவேயில்லை என்பதே!!

தவறெனும் போது வினாடியில் வெடிக்கும் நான்

இத்துனை நாள் தவறியிருந்தேன்..

அவளிடம் மட்டுமல்ல

செல்ல மகனையும் மறந்திருந்தேன்..

பணி என்பதா மனதின் பிணி என்பதா??

எதை..பெறுகிறேன்.. இதை கொடுத்து???

சின்ன சின்ன சந்தோசம் மறந்த நிலை

பணியும் பணமும் தவமாய்..

ஒரு வகையில் பாதி துறவிதான் நாமும்!!

Thursday, 10 February 2011

Maheshkumar Selvaraj ..கவிதைகள்

நீ...,

பேசித் தீர்த்தப் பிறகும்

பிடித்திருந்தது

அந்த இரவு....,

இனி மீளுமா என்ற‌

கவலைகளை

ஒதுக்கிவிட்டு

காதலிக்கத் துவங்கியிருக்கிறேன்

ஒவ்வொரு இரவையும்...

------ ****------

உன்னை

நேசிக்க‌

ஏதாவது காரணம்

தேவையில்லை....,

உன்னைப் பற்றிய‌

நினைவுகளே போதும்...,

--------****------

என் வீணையின்

கம்பிகளிலிருந்து

வருகிறது

புல்லாங்குழல் இசை...,

சொல்ல மறந்த‌

வார்த்தைகளிலிருந்து

வருகிறது

காரணங்களுடனான‌

பதில்...,

எப்பொழுதும்

உதவும் கரங்களினின்று

விலகியே நிற்கும்

எதிர்பார்ப்புகள்

ஏமாற்றங்களும்

ஒருவித உணர்வே...

-----*****-------

காலம்....,

தேடியெடுத்த‌

மூங்கிலில்

"காற்று"

துளையிட்டு வாசித்தது

உன் பெயரை....!!!!!

-----***-----

அதுவரைக்கும்

அவர்கள்

அழவில்லை...,

சிதறிக்கிடக்கும்

சிறு நம்பிக்கைகளை

வழி நெடுக‌

தேடியெடுத்த வண்ணமாய்

அவர்களின் பயணம்

நீண்டு கொண்டேயிருந்த‌து...,

சுவாசத்தின்

கடைசித்துளிகளில்தான்

உணர்ந்தார்கள்

நிராகரிப்பின் வலியை....,

இப்பொழுதுதான்

உறைந்த கண்களிலிருந்து

உதிரம் கசியத்துவங்கியது....,

கடல்நீர்

உவர்ப்பென சொல்பவனிடம்

காட்டுங்கள்

"ஈழம்"

எத்திசையில் இருக்கிறதென.....,

----*******---------

நான்...,

ராஜா கட்சி....!

நீ.....,

ராணி கட்சி....., என‌

பிரிந்து விளையாட‌

குழந்தைகள்

இருக்கிறார்கள்

அகதிகளாய்.....,

ராஜபக்சே நிலத்தில்......!!???

என் நண்பனின் கவிதைகள் இவை, வேளை பளு காரணமாய் அவன் அதிகம் முகப்புத்தகத்தில் உலவுவதில்லை! எனது பக்கத்தில் அவன் எழுதியதை தொகுத்திருக்கிறேன்!!


Wednesday, 9 February 2011

கனவு..வருத்தம்

இருக்கின்ற நாளெல்லாம்...
வருந்தும்படி செய்துவிட்டாய்... இறைவா!
இறவாத தமிழ் படைத்தாய்..
ஈழமெனும் கனவு விதைத்தாய்
பல்லுயிரை..இறக்க விட்டாய்
கைகட்டி நிற்க வைத்தாய்..
கண நேரமும் அகலா குற்ற உணர்வையும் தந்திட்டாய்!

கனவு..வருத்தம்

இருக்கின்ற நாளெல்லாம்...
வருந்தும்படி செய்துவிட்டாய்... இறைவா!
இறவாத தமிழ் படைத்தாய்..
ஈழமெனும் கனவு விதைத்தாய்
பல்லுயிரை..இறக்க விட்டாய்
கைகட்டி நிற்க வைத்தாய்..
கண நேரமும் அகலா குற்ற உணர்வையும் தந்திட்டாய்!

Monday, 7 February 2011

அன்றைய தின பாதிப்பில் எழுதியது!! அஞ்சலியாய் இப்பொழுது!

ஏன் பூமாதேவி

பொறுமை இழந்துவிட்டாய்?

அகழ்வாரை தாங்கும் நிலமாயிற்றே

ஏன் இன்று அழ வைத்துவிட்டாய்?

என்ன செய்தோம் நாங்கள்..

ஏன் இப்படி எங்கள் சகோதரர்களை சாகடித்தாய்?

ஏன் இந்த கோரப்பசி..

கொத்தாய் பிஞ்சுகளை கொன்றுவிட்டாய்?

உனை தெய்வமாய் வணங்கும்.

எங்களுக்கு எப்படி எமனனாய்?

அன்னை பூமிதானே நீ..

குட்டிகளை உண்னும் சர்ப்பமானாயே??

தாயே உன் பசி தணிந்ததா?

போதும் இனி உனக்கு பசிக்காமலே போகட்டும்

இந்த உலகம் இறவாமல் இருக்கட்டும்..

இயற்கையாய் எங்கள் உடல் உனக்கு உணவாகட்டும்

அது வரை பசியாறாதிரு

மாதாவே உன் மடியில் தவழத்தான்..மனம் விரும்பும்

மடிவதற்கு இல்லை!

உனை நிந்தித்ததற்கு..மன்னித்துவிடு என்னை..

மீண்டும் கோபப்பட்டு எங்களை இம்சித்து விடாதே!!

· · Share · Delete

Friday, 4 February 2011

ஒரு திடீர் மழை..

இலையுதிர் காலம்..

இறுதி இலைகளையும் உதிர்த்துவிட்டு..

பாலைவனமாய் மரங்கள்!!

வறண்டு போன கற்பனையில்

பாலையாய் என் மனமும்!

நீர் தேடி வேர்கள்..

பூமியை துளைக்கும் சப்தம்

என் உள் மன இரைச்சல்களுக்கு நிகராய்!

கடவுளின் கருணையால்..

கார் காலத் தொடக்கம்!

மெல்ல உருமாற்ற கொள்ளும் மன்மத மரங்கள்!

ஓயாத உள் மன இரைச்சலால் சூடாகிபோன

என் மீது ஜன்னலின் வழி

ஒரு மழைதுளி!

மறந்துவிட்ட கலைக்கு..

உயிர் நீராய்...!

என் ஜன்னலின் வழி..

மரங்களின் மாற்றங்கள் என்னுள்ளும்!

மெல்ல புன்னகைக்க தொடங்கியது.. என் மனமது!

என் ஜன்னலின் வழி..

தெரித்தது மின்னலின் ஒளி!

இமைக்க மறுத்தன இமைகள்..

எதிர் ஜன்னலில் பௌர்ணமி நிலா!!

வெளி நீட்டிய..

அவள் மலர் கரங்களை..

காதலாய் முத்தமிட்டது மழைதுளிகள்!

பொசுக்க முயன்றேன் அவைகளை..

என் பொறாமை தீ கொண்டு!!

ஜன்னல் நிலவு மறைந்து விட்டது

மழைக்கால வான வில்லாய்!

சாரல் அடித்தும் மூட மறுத்தேன்

என் ஜன்னல் கதவுகளை

இரவு கண்ட கமலமாய்

சுருங்கியது என் மனம்

வெற்றிட ஜன்னலால்

கதிரவன் கண்ட காந்தியாய்

என் கண்கள் மொட்டை மாடியில்!

அமிர்த மயக்கத்தில் அனுப்பினான்...

போலும்- மதுவுண்டவனாய் நான்!

என் ஜன்னலும் அடைப்பட்டது..

மொட்டை மாடியில் நான்!

குளிர் மழையிலும் என்னுள்

தகிப்பு..!

அவளை முழுவதும் அணைக்கும்..

மழைதுளிகளால்!!!

வருணன் ஏன் மண்ணிற்கு வந்தான்

அறிந்து கொண்டேன்...!

ஆணந்த நர்த்தணம்

பதில் பரிசாய் வருணனுக்கு!

இடிச்சத்தங்கள்... மழை இரைச்சல்கள்

இல்லாத அமைதி உள்ளே!

அவளுருவம் நோக்குவதே

தவமாய் இமைக்காத இமைகளோடு!

வருணனுக்கு போட்டியாய்.. வந்தான் வாயு

அவள் கூந்தலும்..

மயில் தோகையாய் ..மாறியதேன்??

வருணனும் வாயுவும்..

அவளோடு உறவாட

அக்னி மட்டும்..என்னோடு!

பரதம் அவள் அறிந்திருக்கலாம்..

சந்தங்கள் நான் அறிந்தவனில்லை

ஆனாலும் உதடுகள் உயிர்பித்து கொண்டிருந்தன....

கார்குழலில் ஒரு கற்றை

ஒரு கன்னம் மறைத்திருக்க

ரவி வர்மனும் எழுத இயலா

எழில் தோற்றம் அது!!

அழகான பெண்கள்தான்..

கவிஞனின் ஆகாரம்..

என் விழி வழி வழியும் மழை நீரும்

மறைக்க வில்லை அவள் முகம்!!

மழை நின்றது..

நீர் விழும் சப்தம்..

அவள் கூந்தல் வழியாய் வழியும்

நீர் சொட்டுகள்..

நேராய் என் இதயத்தில்!!

கூந்தலை சழற்றி திரும்பியவள்..

தொட்டாசிணுங்கியாய்..சுருங்கி போனாள்

என்னுருவம் கண்டு!!

மயில் தன் தோகையடக்கி..

கூட்டுக்குள் அடைந்து விட்டது!

என் துணிகளின் ஈரம் உலர்ந்த பின்னும்

அதே இடத்தில் நான்!

ஜன்னல் அடைப்பதை ...

மறந்து போனேன்..

மழையையும்..அந்த மயிலையும் எதிர்னோக்கி!!!??