Sunday, 31 July 2011

வரா கவிதை

தொண்டையில்..சிக்கி வர தவிக்கும் வார்த்தை ..போல
கை விரலில் வெளிபடா..விந்தையாய் இன்று என் மனகவிதைகள்..
கவிதையாலே பேசிய காலங்கள்.. கவிதையே உன்னாலோ?
உனை தவிர ..வேறு சிந்திக்கா இயலா வழி...
நீ தந்திட்ட இந்த தோல்வியும் சுகம்தான்!!!
பிரிவொன்று சேரலாம்..என சொல்லி பிரிகையில்
அறிய வில்லை.. தண்டவாளத்திற்கு சேரவழியேயில்லை என்பதை
இன்றும் தொடரும் .. என் பயணம்..
ஒரு பக்கம் நானும் மறு பக்கம் உன் நினைவுமாய்..

Saturday, 30 July 2011

சொர்கம்...

சொர்கம் தேடி..தேடி கடவுளை சேர்ந்தேன்..

மண்ணில் கொஞ்சம்... தந்தால் என்ன என்றேன்..?

சிரித்தார்.. வா என்னுடன் என்று புவியில் சிலரை சுட்டினார்..

பால் மணம் மாறா குழந்தை சிரிக்க - தாய் தந்தை இப்போது சொர்கம்

தாய் மடியில் துயிலும் ..சேய்க்கு சொர்கம்..

கொளுத்தும் வெயில்.. காதலி மடியில் -சொர்கமடா..

பெரும் தோல்வி.. ஆறுதலாய் மனைவிமடி -சொர்கம்

60 ஐ தாண்டி.. அரவனைப்பாய் பிள்ளை..- மடி விளையாடும் பேரப்பிள்ளைகள்-- இறக்கும் முன் சொர்கம்..

எதிர்பார்பன்றீ கூடவே வரும் நட்பும் சொர்கம்..

இவையெல்லாம் படைத்திட்ட நானே ஏங்கும் சொர்கம்..என்றான்!

மனித பிறவி வேண்டா வரம் கேட்காமல்..மீண்டும் பிறப்பெடுக்க ஆசியுற்றேன்

இந்த நொடி..இனிய நொடி

மண்ணில் சொர்கம் அமைப்போம் !


புரிதல்..

புரிதல் முதல் பார்வையில்..பிடித்ததில் தொடங்கியது..
புரிதல் புதிரில்லாமல் புதியதாய் ..புரிந்து..
புரிந்து புரிந்து..மணம் புரிந்து..
புரிந்து.. முதல் புணர்ந்து.. தளவுற்ற பின்..
புரிதலின் முதல் இடைவெளி..புரியதொடங்குகிறது புதியதாய் புரிதல்!


பேசி பேசியே..கழிந்த தினங்கள்..
பேசாமலே கழலும் தினங்கள்..
அள்ளி அள்ளி கண்ணில் நிரப்பிய காலம்..
கையிலுள்ள.. நிழற்படம் கூட நோக்கா காலம்..
இனுமும் அந்த காதல் என்னுள் உயிர்த்துள்ளதா??????

நீ எனை புறக்கணித்த நொடிகள்..
மலரும் நினைவாய்..
உன் காலடியில் கசங்கிய மனது..
வாட வைத்த உன் வார்த்தைகள்...
ஆனாலும் பூத்தது போலேதான் உள்ளது..காதல்!!

நான் முழுதும் ..அறிந்து தெளிந்த விடயம் நீ..
முற்றிலும் புரியாத புதிரும் நீயாய்..
வகுப்பை தாண்டியதும் மறக்கும் பாடமாய்..
அவளின் மீதான புரிதல்..!

Friday, 22 July 2011

..நினைவுகளாய்

மிக மெதுவாய்....
தலை கேசம் கோதி உறங்க வைத்தாய்
அதனிலும் மென்மையாய்..தலை கோதி துயில்கலைத்தாய்..
துயின்றெழுந்தேன்..
உன் விரல் படாத கேசமனைத்தும்..வீணாய்யிரைந்து..​அறையெங்கும்
உன் நினைவுகளை .. அதிகமாய் உசுப்பேற்றிவிட்டு!