Tuesday, 28 February 2012
கிறுக்கல்..
என்ன எழுதுவென்று தெரியாமலே..
சோம்பி திரிகிறது சிந்தனை குதிரை
காதல் கழனி குடித்து குடித்து ..நிரம்பி போனதால்
கொள்ளு எள்ளு தேடாமல் திரிகிறது
நுனி புல் மேய்வது போல்..
அழுத்தமில்லாமல் கிறுக்கும் சிறுமனம்!!
Thursday, 16 February 2012
யாருக்கும் தெரியாமலே.....
எந்த மரம்..
தருகிறெதென்று தெரியவில்லை
எனக்கான மூச்சு காற்றை..
யார் நெய்வார்கள்
எனக்கான சட்டையை
யார் நட்ட மரமோ
என்னுள் போன பழத்திற்கு
விதைத்தவனையும்..
அறுத்தவனையும் தெரிவிக்கவில்லை
நான் கொண்ட நெல் மணிகள்
பிடித்தவனின்..
பெயர் பொறிக்கபடவில்லை
பதப்படுத்திய மீனில்
மூச்சடக்கியவன்
பெயர் தெரியாது..
முத்து மாலையில்
வீணையின் ஸ்வரமும் ..
மீட்டுபவரும் அறியவில்லை
செய்தவன் பெயரை..
இசைகள் சொல்லப்போவதேயில்லை
புல்லாங்குழல் தந்திட்ட மூங்கிலை பற்றியும்
செய்திட்ட கைகளை பற்றியும்..
பியொனா..
வாசிக்கின்ற விரல்களுக்குதான் மரியாதை
செய்திட்ட கரங்களுக்கு இல்லை
நிழல்கள் நேசிக்கப்படும்
நிஜங்களோ நசுக்கப்படும்
உருவாக்கும் விரல்களுக்கு
தேவையெல்லாம் ஒரு கவளம்தான்
Wednesday, 15 February 2012
அவளாலே..
தூக்கம் வரா இரவுகளில் வந்த கவிதைகளை விட
தூங்கும் கணத்தில் நீ கனவில் கலைத்த பின்
கிறுக்கும் வரிகளில் மிக அழகாய் ஒளிந்திருப்பாய் நீ
ஏதோ குறையுடைய ஓவியம் போலவே
முழுமையாய் நீ வராத கனவால் கலையும் தூக்கத்தை
ஈடு செய்ய முயலும்.. சின்ன கவிதைகள்
முழுமையடையாமல் .. என் கனவை போலவே
விரும்பும் நேரத்தில வர மறுக்கும் கனவை போலவே
சில சமயம் கவிதையும்.. தொடர்பின்றி
என் கனவையும்.. கவிதையும் கட்டி போட்டவள் நீ!
மெதுவாய் மிக மெதுவாய்..
உள் நுழைந்து வெகு சீக்கிரமே ஆக்ரமித்துவிட்ட உன் நினைவுகளே..
விரட்டுவது போல் நடித்து கொண்டிருக்கிறேன்
சில கவனக்குறைவுக்கு காரணமாகிவிட்ட
நினைவெனும் சுமையை இறக்கிவிட எத்தினிக்காமல்
சுமையுடன் ஓட முயல்கிறேன்.. கழுதை போலே
ஆனாலும் சுகமாகத்தான் இருக்கிறது. நினைவு சுமைகள்!
காதல்..எனப்படுவது..???!!!!!
பல கேள்விகுறி சேர்ந்த
ஒரு ஆச்சரிய குறியோ காதல்
விழியில் விழுந்துவுடன்
முளைக்கும் ஆல்மரவிதை காதல்
விழியில் விழ கூட இல்லை
செவியின் வழியும் காதல் ஆசை அலைகள்
கடிதத்தில் மட்டுமே கண்டுணரும் காதல்
பக்கத்து வீட்டு காதல்
எதிர் வீட்டிலும் காதல்
முறைபெண் ஆசை காதல்
மாமன் மகள் காதல்
அத்தை பையன் ஆசை காதல்
அண்ணியின் தங்கையால் காதல்
அக்காவின் நாத்தனாராகி காதல்
மதம் மாற்றும் காதல்
ஜாதி மறுக்கும் காதல்
பள்ளி வயது காதல்
கல்லூரியிலும் காதல்
பணி பக்கத்து இருக்கை காதல்
பேருந்து கடக்கையில் காதல்
தெரு முனை சந்திப்பில் காதல்
பிள்ளையார் கோவில் வலகாதல்
நட்பின் காதல் தோழமையால் காதல்
காமம் உந்திதள்ள வந்திட்ட காதல்
புன்னகை மட்டுமே பரிமாறிட்ட காதல்
புன்னகைக்காத போதும் ஒரு தலை காதல்
உலகையே எதிர்க்க வைக்கும் கள்ள காதலும்
எதுதான் காதல்..எதிலும் காதல்
காதல் காணும் உலகம் பல
காதல் காணாத உலகமே இல!!!
Monday, 6 February 2012
எக்காலமும் அவளாகி
விடியலின் .. வேளை
சூரிய உதயம்
பிறை நெற்றியில்.. வட்ட குங்கும பொட்டாய்
முன் பனி காலை..
புல் வெளி பனிதுளி
உன் இதழ் நீங்கா வியர்வைதுளி
கார்கால மேக கூட்டம்
தோளும் இடையும் கூட்டும் கூந்தல் காலம்
நிலம் வறண்ட கோடை
ஒன்றிரண்டு வெடிப்புள்ள பாதப் பிரதியாய்
மரம் குளிக்கும் மழை மாலைகள்..
கூந்தல் வழிந்திட்ட குற்றால அருவி நிலை
தொட்டசினுங்கி சுருங்கும் ..
முன் மாலை பொழுது
இமை நெற்றி சுருங்கும் சிந்தனை வேளைகள்
குயில்கள் குக்கூவிடும் வசந்தம்..
உன் நிலை கண்ணாடி அறியும்
கூந்தலுடன் பிறந்திட்ட கானங்களை
இயற்கையுடன் இயைந்திட்ட இவளை
இறக்கும் முன் மறக்கப்போவதில்லை
நான் இறக்கும் முன் அவள் எனை நினைக்கப்போவதுமில்லை!!!
Subscribe to:
Posts (Atom)
