Thursday, 24 November 2011

விலைவாசி..

கனவுகளில் கழியும் இளமையில்..
மேலும் ஒரு நரையாய் விலையேற்றம்..
ஒரு இரவில் ஏறிய விலைவாசி அறியுமா???
சில வருடம் அதிகமாக்கிவிட்டதை - நம் வசந்தத்திற்கு

தங்கம் விலையேறுது தவிக்கும் தங்கை
அரை பவுனாவது போட வேண்டி..
ஆறு மாதமாய் பேரு வைக்காத அக்கா குழந்தை..
நான் விற்ற உன் நகை மறைப்பதற்காய்
தாய்வீடே போகா நீயும்
தள்ளி போட்ட குழந்தையும்
அறியாத அரசியல் வியாதிகளை என்ன செய்ய???

FB..

உறங்கும் முன் தெரியும்தான்...
நீ அருகில் இல்லை என..
விழிக்கும் நேரம் உன் முகம் தேடும் மனமதை என்ன செய்ய??

ஜெ ஜெ

ஜெ: மாடு கொடுத்தேன் 100 பேருக்கு..
அந்த பாலுக்கு நல்ல விலைக்குதானே கோடி பேருக்கு ஏத்தினேன்
தப்புன்னு சொன்னா எப்படி????

ஏழை: அம்மா புண்ணாக்கு வாங்க கன்னுகுட்டி வித்தேன்..
அதை பஸ்லு ஏத்தி வர மாட்டையே வித்தேன்..
மறுபடி ஏழையாயிட்டேன் 2 வது ஒரு மாடு கொடுங்களேன்???

ஜெ: ?????
ஜெ : ஏழைங்கன்னா நடந்து போனாதானே நீ பஸ்ல போர வசதியிருந்தா நீ தவறான பயனாளி ...
உன் மேல மாடு ஆக்ரமிப்பு கேஸ் போடுறேன்..

ஏழை : சரிம்மா இந்த தடவையோட பெங்களுரு டிரிப் முடிச்சுடுங்க உங்க பாதுகாப்பு செலவுல அங்கேயும் கஜானா காலியாம்..
தண்ணி குடுக்காதவந்தான் இருந்தாலும் எங்க நிலைமை அங்க வேணாம்....

Monday, 7 November 2011

நானும் ஒரு ராஜா..

எழுதப்பட்ட கவிதைகளை வாசித்து கொண்டிருக்கிறேன்..
பணியும் பணமும் பாதித்த கவிஞனை மீட்டெடுக்க..
உருகி எழுதிய காதல் வரியெல்லாம்..
ஒரு புன்னகையை உதட்டில் ஒட்டியது அவளவே..
வரிகளும் .. வாழ்க்கையும் கேலி செய்வதால்..
அவலம் சாடும்.. சமூக வரிகள் கூட சிரிக்கிறது
பணம் தேடி மண் துறந்ததால்..
எண்ணமும் எழுத்தும் .. ஒட்டாத வாழ்க்கை
என்ன செய்ய.. என்ன செய்ய
மணிமகுடம் தரித்து...
பல வருடம் போரிலே கழித்து இறந்துவிட்ட மாமன்னவன் போலே
காணி நிலத்தில் அழகிய வீடுமுண்டு...
காற்று தர நல் மரமுண்டு
காதல் செய்ய துணையுமுண்டு..
கண் நிறைய மக்களுமுண்டு..
மன்னவனோ அன்னிய மண்ணில்!!

என்ன வாழ்கைடா இது????