Thursday, 24 March 2011
யாருக்கு..யாருக்கு.??
குடும்பம்- சொந்த குடும்பம்;தோழி குடும்பம்
இலவசம்- தமிழன் இனி பிச்சைக்காரன் இருவராலும்
சாதீ- இரு இடங்களிலும் விரவி..பரவி
நேர்மை-கடுகளவும் இல்லை
மகா மக குளியல்;2ஜி
சுடுகாட்டு ஊழல்-சர்க்காரியா
நடமாடும் நகை கடை- கிடப்பில் கேபிள் கார்ப்ரேஸன்
யாரால் நமக்கு, நாட்டுக்கு சில சதவீதமாவது நன்மை???
ஓட்டளிக்கத்தான் வேண்டும் யாருக்கு???? உண்மையை சொல்லுங்கள்!!..யாருக்கு..யாருக்கு????
நம் முன்..உள்ள சவால்கள்..
காவிரி நீர்
முல்லை பெரியாரு
மின் தேவை
விசமான ஆலைகள்(கடலூர்,ஸ்டெர்லைட்..)
ஆற்றுமணல் கொள்ளை
வேலையிண்மை
விவசாய உற்பத்தி
நதி இணைத்தல்
சமச்சீர் கல்வி
சுகாதரம்...இவற்றில் இரு கழகங்களில் யார் சிறப்பாய் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது முயல்வார்கள்?? ஊழல்எ ன்று சொல்ல இயலவில்லை..ஏனெனில் நமக்கு காமராஜரோடு முடிந்து விட்டது கறையற்ற தலைவன் என்பது"கறை நல்லது"!!?? வேதனையை தவிர வேறு இல்லை...
தமிழ் நாட்டின் தலையெழுத்தை நாம் எழுதப் போகீறோம்?? வாருங்கள் நண்பர்களே கட்சி, தனி மனித உணர்வுகள் இல்லாமல் நடுனிலைமையுடன் அலசுவோம்..இதனை உங்கள் நட்புகளுக்கும் அனுப்புங்கள்.. படித்தவர்கள் நாம் முயற்சிப்போம்.. நல்ல ஒரு விவாதமாய் தீர்வாய்
Sunday, 13 March 2011
அழித்தாடும் கடல்
உலமெல்லாம்..ஜப்பான் வளர்ச்சியை
நோக்குவதால்..கடலே நீயும் பார்த்தாயோ..
இதயப்பகுதியில்..அணுகுண்டு தாங்கி
எழுந்து நிற்கும்..5 அடி மனிதர்களை காண
50 அடி எழுந்து ஆர்பரித்து வந்தாயா..
இயற்கையை விஞ்சும்...
அறிவியல்..அவர்களது...அதனால்
ஆத்திரப்பட்டு வந்தாயோ..
கார்கள்..எல்லாம் கட்டுமரம் ஆனது..
கண்டெய்னர் கூட காகிதகப்பல் போல..
அதிர்வுகளை அட்ஜஸ்ட் செய்யும்..கட்டிடங்கள்
அதனாலா..அடியோடு பெயர்த்தெடுத்தாயா..
அமெரிக்காவை விட நீ தான் வலிமையானவன்..
போட்டிக்கு அணு உலைகளை..வெடிக்க செய்கிறாய்
இயற்கையின் ருத்ரதாண்டவம்..
இசையாய் அறிந்தோம் ..
இனிமாயாய் நினைத்தோம்....ஒய்வெடுப்பது கூட உன் மடியில்தான்..
இன்றுதான் மீண்டும் உரைத்தாய்-நான்
இன்னல் என்று..-மண்டியிட்டோம்.
நேற்று கோடிகளில் புரண்டவன்
இன்று தெரு கோடியில் கூட அல்ல..ஊர் கோடியில்..
உழைத்தே உயர்ந்தவர்கள்...அலையடித்து கவிழ்த்துவிட்டாய்
மீண்டும் உழைப்பார்கள் என்ற நம்பிக்கையா
இறைவனே..இல்லை என்றே
நேற்று ஈழமும்..
இன்று ஜப்பானும் சொல்கிறது..
அலையாடும் கடல்..இனி
அழித்தாடும் கடலாய்..
Tuesday, 8 March 2011
சொல்லா வார்த்தைகளின் சுகம்..
சொல்ல துடிக்கும் வார்த்தைகள்...
ஒவ்வொரு இரவும்..சிந்தித்து..
வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சிலையாய் வடித்து..
உனை காண்கையிலே..உருகும் பனிக்கட்டியாய்...
ஐஸ்கிரீம் சிலையால்..கரையும் வார்த்தைகல்(ள்)..
நட்பாய் சிரிக்கிறாய்..
நன்றாகத்தான் பேசுகிறேன்..வேறு விடயங்களை
காதல் மட்டும்..வரவேயில்லை வார்த்தைகளில்
ஒரு தினத்தில் உதித்த காதல்..
உனையடைய ஒரு வருடமாய் காத்திருக்கிறது..
நட்பெனும் ரயில் பிடித்து உன் அருகில் வந்தேன்..
காதல் சொல்ல முயலும் போதோ..உன் கையில் அதே நட்பெனும் சிகப்பு கொடி!!
சரி நட்பே போதுமென ..நகர்ந்து விடுவேன்
துயிலவே விடுவதில்லை..துன்புறுத்தும் காதல்
நேர் வார்த்தைகள்..உனை நெருங்கா
என கொண்டு..மறைமுக வார்த்தைகளால் மனமுறைக்கும் முயற்சி..
அதில் இது வரை இல்லை அயர்ச்சி..
நடை பெறுமா காதல் இடப்பெயர்ச்சி
ஒவ்வொரு தினமும்..உரையாடிவந்து அசை போடும் மனது..
சில வார்த்தைகள் உரைத்துவிட்டதாகவே நம்பும் ஆசை மனது..
ஒவ்வொரு இரவும்..தித்திக்கும் கற்பனையில் என் மனம் உரைத்த வார்த்தைகளால்
தேர்ந்தெடுத்து கொண்டேயிருக்கிறேன்...வார்த்தைகளை தினமும்
வருடம் தோறும் மழையை நம்பும் விவசாயியை போல
சொல்லா வார்த்தைகளும் சுகம்தான்!!!
Wednesday, 2 March 2011
நீ அறிதல்
யாரடி நீ..
என்னுள் யாரடி நீ??
எப்படி ஆனேன்.. நான் நீயாய்??
யார் நீ அல்ல எது நீ??
என் கண்மணியா நீ..
சில நேரம் நீயற்ற பொருளையும் காட்சிபடுத்தலால்..அதுவல்ல நீ!
அனைத்தையும் இயக்கும் மூளையோ..
கண்ணில் தெரியும் பிம்பம் எல்லாம்.. நீ அல்ல என அறிவுறுவதால் அதுவமல்ல!
உள் செல்லும் உயிர் காற்றா..
பலமுறை நுரையீரலின் அடிப்பாகம் கூட தொடாமல் திரும்புமாம் சுவாசம்..
எங்கோ படித்தது ஆகையால் அதுவுமல்ல நீ!
இதயமே நீ எனவா..
எண்ணங்கள் உதிப்பதில் இதனில் இல்லை என்கிறது அறிவியல்
எங்கும் பாயும்..இரத்தமோ நீ
வயதானால் ஓட்டம் குறையுமாமே..??
என்னுள் நீ குறைய இயலாதே..!!
சரி என்னுயிர்தான் நீ ..
முடிகளும், நகங்களும்..உயிரில்லை எங்களுக்கு என சிரிக்கிறது போ
யார் நீ..யார் நீ..
நான் அறிதல் முக்தியாம்..
"நீ அறிதல்" முடிந்தால் அல்லவா.. நான் அறியலாம்!!