Monday, 25 February 2013

காதலி-ஆசிட்??

ஏனோ..
வெற்றிடத்தை ..அதிகமாக்கியே செல்கிறது
உந்தன் உதட்டளவு வார்த்தைகள்..
என் உளத்தை நிறைக்க..உன் புன்னகை போதும்..
அது இதயத்தில்..தொடங்கியிருப்பின்!!!

விலகி போ..
என்று மரண தண்டனை தராமல்..
உதட்டளவு வார்த்தைகளில்..
கருணைமனு கால சித்ரவதை தருகிறாய்..

உண்மை சொல்லி விலகி போக..
தயக்கமேனோ???
மீதமிருக்கும்..காதலா?? கருணையா?
அமில வீச்சாகுமென பயமா???

கவலை படாதே..
உண்மை காதலில்.. வலி இருக்கும்
பழிக்கு பழி இருக்காது..
எங்கிருந்தாலும் வாழ்க சொல்லும்..
வாயற்ற ஊமையாய்தானடி என் காதலும்..

சொல்லிவிட்டு விலகி விடு..
நேற்றைய நினைவுகளில்..
உன் பெயரை என் குழந்தைக்கு வைப்பேன்!!!

Friday, 22 February 2013

நீரின் பணி..

என்ன செய்வது என்று புரியாத போது..
செய்வதை.. அரை குறையாக விட முடியாமல்..
முழுக்க செய்கிறேன்..
விளைவுகள்.. தெரியா!?
வேரில் விழும் நீருக்கு..
அது நெல்லா..இல்லை புல்லா?? தெரிவதேயில்லை..
நெல்லின் வேரில் விழும் நீரும்.. அறிவதில்லை
விளையப்போவது.. மணியா இல்லை பதறா என?
மொத்தத்தில்..இன்று நீராயிருக்கிறேன்..
விளைச்சலில் பங்கில்லை..
விளைவுகளில்..???

விட்டில் பூச்சி வலிகள்..

விளைச்சலில்..விளைவெதெல்லாம்
விற்பனைக்கு வருவதில்லை..
விளைவுகளின் வலியும்..
வெளிகொணரப்படுவதில்லை..
வெளிச்சம் தேடும் விட்டில்களாய்..
விளைவுகள் தெரியா செயல்களும்..
வெளிச்சம் தேடி மடியும் விட்டிலை விட
வெளிச்சம் கொடுத்து விட்டு மடியும்..
மின்மினிகள்..சிறந்தவையோ??
எனில் விட்டில்களின்.. வேலைதானென்னவோ??
பயனற்ற வெற்று .. படைப்புகளும் உண்டா படைப்பியலில்...??

வெறும் வெற்றிடம் நிரப்பி...
வெற்று இடம்.. ஏற்படுத்தா போகும்..
சில பல மனிதர்களின் எச்சமா விட்டிலும்??

காதல்..

உள்ளுக்குள்..நீ ஒளிந்திருக்கிறாய்.. என்பது
இனிய காதல் கீதமும்..
கரம் கோர்த்து திரியும்.. காதலர்களும்
ஒரு துளி .. கண்ணீரும்
சிறு ஆற்றாமை தீயையும்..
தருகின்ற நேரமெல்லாம்.. தெரிகிறது!!

கருணை..

பிச்சைகாரர்களின் பாத்திரமும்..
பாலைவன மணலும்.. 
காத்துகிடக்கின்றன கருணையை எதிர்பார்த்து!!
கடக்கின்ற கால்களும்..
மிதக்கின்ற மேகமும்..
ஏமாற்றத்தையே..தருகின்ற போதும்..
நம்பிக்கையுடனே நகரும் நாட்கள்...!!!!

வினோதினி-காதல் தலைகுனிவு- 12.2.13

பார்த்தவுடன்..வரும் காதல்..
பார்க்காமலே வரும்..காதல்..
களவு புரிபவன் மேல் வரும்.. காதல்..
கற்பழித்தவன் மீதே வரும்.. காதல்..
இப்படி காதலை.. கறிகாய் போல் ஆக்கிய 
அத்துனை திரைதுறை அன்பர்களுக்கும்..
வினோதினியின் அன்பு காணிக்கை!!!

ரவுடிகளை.. வீரப்பன்களை...
குடிகாரன்களை.. திருடன்களை..
பெண்கள் பின்னால் அலைபவனை..
கதானாயகனாக்கிய.. அரிவுஜீவிகளே..
அப்பாத்திரங்களை ஏற்று நடித்த நல்லவர்ளே..
நாளைய தலைவர்களே...

சகோதரி வினோதினியின் இனிய வணக்கங்கள்..

உலக காதலர் தினத்திற்கு .. இனிய பரிசு !!

காதலை.. சுவாசித்து காதலை கவிதையாக்கி..
ஒரு தலை காதலை..கூட உயர்த்தி பிடிக்கும்
என் உணர்வுகளை வெறுக்கிறேன்..
பாதகன் இவன் கொண்டதும் காதல் என்றால்..
ஓ காதலே உனை.. வெறுக்கிறேன்!!

இனும் பல வினோதினிகள்.. வெளிச்சம் படாமலே..
காதல் என்பதும்.. காமம் என்பதும்..
நம்மை விரும்புவர்கள் மேல் வர வேண்டும்!!

உலகின் உச்சபட்ச அன்பின் நிலை காதல்..
புத்தனை தாண்டிய சகிப்புதன்மையே காதல்..
மரணிக்கும் வரை மறவாதது காதல்..
மன்னிக்க தூண்டுவது.. காதல்..

எனதருமை சகோதரியே.. இந்த காதலை மன்னித்துவிடு!!
இனும் இவ்வுலகம் மீதம் வைத்திருக்கும்.. அன்பின் ஊற்றுகண் அது..
மன்னித்து விடு.. மன்னித்து விடு..
உன் ஆன்மாவின் துனையை..
அனாதவரற்ற பெண்களுக்கு துனையாக்கிவிடு..
வேண்டம் இனுமொரு வினோதினி!!

காதலர்தின..காசு தினம்

காதலும்..காசும் ஒன்றடா..
எவ்வளவு கிடைத்தாலும்..போதவில்லை!
அடுத்தவனிடம் இழப்பதற்கு விரும்புவதில்லை..
தான் கொண்டதை விட..
அடுத்தவனின் கையிருப்பை.. கவனிக்க செய்வது..!!
கள்ளதனத்தில் வந்தாலும் வசீகரிப்பது..
இழந்தபின்னே .. ஞானம் தருவது..
இன்று வெறுத்து.. நாளை மோகம் தருவது!!
காவி கொண்டபின்னும்.. காலை சுற்றுவது..
முன்னதின்றி பின்னது வாழும்..
பின்னதின்றி முன்னது.. வற்றிபோகும்!

காசு வேண்டும்.. நண்பா.. காசு வேண்டும்..
காதல் வாழவும் காசு வேண்டும்!!!

காதலர் தினத்தில்..கொஞ்சம் அதிகம் உழைப்போம்!!

குமுதம்-கேவலம்

மிக மிக தவறான ... முன்னுதாரணத்தை 
ஏற்படுத்திவிட்டது..குமுதம்!!
பெரியாரை..மணியம்மையின் பெயர்களை...
90 வயது உடைய முன்னாள் முதல்வரை..
2 மகள்களின் நல்ல அம்மாவை..
மிக கேவலப்படுத்தி உள்ளது!!..

இது ஒரு "பத்திரிக்கை" விபச்சாரமன்றி வேறில்லை..
கண்ணியமற்ற குமுதத்தின் செயலை கண்டிக்கிறேன்!!

கட்சி வேறுபாடின்றி தவறை கண்டிக்கிறேன்..
பத்திரிக்கைகளின்.. மாண்பை காப்பாற்றும் செயல்கள் தமிழ் நிறுவனங்களிடம் இல்லை.

எல்லா வகையிலும்..
தமிழன் தலை குனிய வேண்டிய நிலையே இங்கு!!!

கட்சிகள்..அதன் தலைவர்கள்..
சினிமா..அதன் அரசியல்
ஒரு சார்பு பத்திரிகைகள்..
இதனால்..
ஈழம்..
கூடங்குளம்..
பெரியாறு அணை..
காவிரி நீர்..
மீனவனின் உயிர்கள்..
இனும் பல இழப்புகள் தமிழகத்திற்கு!!

தமிழ்..இனி மெல்ல சாகும்!!

காவிரி..அரசிதழில் பதிவு

என் நிலங்கள்..தரிசாய் போகா
அந்திம காலம்.. காணி நிலத்தோடு
நான் நெல்லறுத்து..அரிசியளப்பேன்..
கிராமம் விட்ட சொந்தமனைத்திற்கும்!!
அரசியல் கலக்கா நன்றி...

தஞ்சை மண்ணை காப்பாற்றிய அனைவருக்கும்!!