Monday, 12 December 2011

பார.. தீ!!!!


எழுதிய வரிகளெல்லாம்..ஏவுகனைகளாம்.. சீரி விழுந்த சொற்களெல்லாம்.. வெடித்திட்ட குண்டுகளாம்.. ஆதிசக்தி வணங்குபவனாம்.. பெரியாருக்கே அப்பனாம் பகுத்தறிவில்.. 50 வருடம் கழித்து பெண் அடைந்த உயரம்தனை.. அன்றே பாட்டில் அளவிட்டவன்..
இரத்தல்தான்..புலவன் நிலமையாம்..
ஆளுபவனை எத்திதள்ளிய முதல்வனாம்..
கட்டிய முண்டாசில் கட்டிவைத்திட்ட கனல்குஞ்சாம்
பாரதி என் பாட்டுடை தலைவன்..
உனை முற்றும் அறியாமலே அடிமையானென்..
இன்றும் குறளும் நீயும் அறிவின் களஞ்சியமே..
பாரதி..இந்த பாரின் தீ!!!!!!

அப்பாவி உலகம்..

தன் சொத்து விற்று ..
மக்கள் பணி செய்த அப்பாவிகளும்..
மக்கள் சொத்தை தீர்த்து..
வண்ண வீடு தீட்டிய மகான்களும்..
மனைவி நகை விற்று..
கூலி கொடுத்த உதவாகரைகளும்..
கூலி பணம் கொடுக்கமால்..
சின்ன வீட்டை சீராட்டும் உத்தமர்களும்..
உண்மை பேசி நன்மை செய்யும் விளங்காதவர்களும்...
அடுக்குமொழி பேசி ஆட்டை போடும் அறிவாளிகளும்..

வாழிய வாழியவே.. வாழ்வாங்கு வாழ்கவே!!!!

Sunday, 11 December 2011

ரஜினி- - ஒரு நிஜ சகாப்தம்


ரஜினி..

மூன்றெழுத்தில்.. கட்டுண்டு ஒரு உலகம்.!

ஒரு நடிகனுக்கு அடிமையா நீ??

ஏளன கேள்விகளை கடந்துள்ளோம்..

உள்ளில் ஒரு தீ உண்டு எங்களிடம்..

அதன் திரி ஏற்றியவன் அவனல்லவா..

வெறும் தலைமுடி கோதியதோ..

சிகரெட் மாற்றி போட்டதா கட்டி போட்டுள்ளது..

உண்மையாய் உழைப்பவன் உயரத்தில்..

உள்ளத்தில் வைத்து உயருகிறோம்!

ரஜினியை படத்தில் உணரவில்லை..

எங்களை உணர்கிறோம்..

விருந்தில்லை..

அழைப்பில்லை..

அரசியலில்லை..

வருடா வருடம் படமும் இல்லை..

ஆனால் கலையாத கூட்டமுண்டு..

கட்டு பட்ட கடலலை போல்..

அரசியல் வருகை

அதை பற்றி எதிரியாய் நின்று வைக்கும் விமர்சனமும்

அடிக்கோடிட்டு காட்டும்.. அவரின் மீதான எதிர்பார்ப்பை!!

நிச்சயமாய் நாற்காலி தெரிந்த போது..

நிதானமாய் அதை மறுத்தவன்..

சேர்த்து வைத்த செல்வாக்கை சொல்வாக்கில் செலவழித்தவன்..

காலத்தின் போக்கில் ..

நீரோட்டம் போல..

காட்சிகள் மாறிய போதும்..

கலையாத மலையாய்..

அவரோடு தொலைபேசியதை..

அரசு குறிப்பாய்..அரசியல் குறிப்பாய்

உழைப்பும்..

அடக்கமும்..

உற்சாகமும்..

வேகமும்..

எளிமையும்..

எங்களின் மன்னவன் நீ

நாளை யாரறிவார்..

உன்னை நீ அறிவாய்..!

உனை போல் உழைத்திட உறுதி பூண்ட கூட்டதிலொருவன்!!!


Tuesday, 6 December 2011

FB STATUS..கிறுக்கல்கள்

உயிர் உறிஞ்சும் உழைப்பையும் கொடுத்து..
ஊதியத்தையும் ஓரிரு மாதங்கள் விட்டு வைப்பவன்..
கூலியாய்.. அமைதியாய்..
முதுகில் ஏறி பயணிப்பவன்..
பெரும் முதலாளியாய்..
பகட்டாய்.. படைப்பின் அர்த்தமது அணர்த்தமாய்!!!?????

முயற்சி எனும் முத்து எடுத்து கோர்த்துகொண்டெ இரு..
ஒரு நாள் மாலை முற்று பெற்றே தீரும்..

"இந்த நிலை ஒரு நாள் நிச்சயம் மாறும்"...
தன்னம்பிக்கை வணக்கம் நட்புகளே..

ஒய் திஸ் பீப்பிள் இப்படி,
கனியக்கா கமிங்க் , பீப்பீள்ஸ் ஆல் லாஃபிங்க்
மம்மி பெங்கலூரு ஓவர், கொடனாடு கோயிங்க்,
னோகேர் கூடங்குளம், ஃபொர்கெட் முல்லை பெரியாரு
மில்க் ரேட்டு ஹைக்கு, பீரு ரேட்டு லோவு
பஸ் ஃபேரு ஹை பீவரு.. நொ ஆக்சன் டூ ரிடுசு..
நம்ம லைஃபு நோவு...
நொ வொரி நொ வொரிடா .. ஒன்லி கொலைவெறி கொலைவெறிடா..