Monday, 31 January 2011

பளிங்கி குண்டுகள் ..

வண்ண வண்ண குண்டு..

வழு வழுப்பான குண்டு..

பள்ளம் மேடு எல்லாம்...பார்க்காத குண்டு

பள பளப்பாய் இருப்பதாலே..பளிங்கி குண்டாம்!!

காருவாய் காசிலே..வாங்கி வாங்கி

கால் சட்டை பை நிறைய சேர்த்த குண்டாம்..

ஒவ்வொரு வண்ணமாய் தேடி..தேடி சொத்தாய் சேர்க்கையிலே

இவன் பளிங்கி வாங்கி அழிப்பான் சொத்தை என அய்யனை திட்ட வைத்த குண்டு

மோட்டா குண்டு தைரியத்தில்..

மோதி பார்ப்போம் வா என்பேன் பக்கம் வீட்டு அண்ணனிடம்

மோதிவிட்டு மோட்டா டாடா காட்டையிலே..

கனவெல்லாம் வலி சில்லுசில்லாய்

கைவிரல் கலையது..

கைகூடி வரவேயில்லே..

பக்கம் வீட்டு தம்பி எனை அழைத்து..மூனு குண்டு தோக்கையிலே

தோண்டி புதைத்தேன் பளிங்கியின் நினைவை

சில காலம் கழித்து..

கதிரவனோடு எழுந்து..

அவன் சுடும் முன்..சூடாய் போகும் அலுவல் வாழ்க்கையில்

பறந்து பறந்து பாய்கின்ற நேரத்தில்..சாலையோரத்தில்

வண்ண பளிங்கி வைத்து..

விரல் சுண்டி விளையாடும் இளைஞ கூட்டம் கான்கையில்

உழைக்க மறுக்கும் ஊதாறிபயல்கள்..என உதறும் வார்த்தைகளில்

தோற்ற குண்டுகளின் வலிகள்தான் அதிகம்!!!


Saturday, 22 January 2011

காதல் கிறுக்கு!

பல பக்கம் நிரப்பும் வசனங்களை..வாளாவியிருந்தேன்..
பல மணி நேரம்..கதைத்திருப்பேன்..
என் மனதை மொழிபெயற்கா வார்த்தைகளை!!
இதோ..இனி..
என் "பேசா மௌனமாவது"..மொழி பெயற்கட்டும்
அவள் என் மனமறியட்டும்!!!!!

சூரியனை நோக்கும் காந்தி
சந்திரனால் மலரும் அல்லி
என்பது இயற்கையின் விதி..
விதி விலக்காய்..
நீ வருகையில் திசை மாறியது காந்தி பூ
பகலில் மலருது அல்லி!!!
நான் மாறியது அதனாலோ உன் கண்ணுக்கு தெரியவில்லை!!

கவிதை கிறுக்கில்..
சிந்தித்து..சிந்தித்து..கசங்கியது மனது!
கடைசியில்..வழக்கம் போல
அவளது பெயரை மட்டும் எழுதிவைத்தேன்!!

பகலும் இரவும்..
மாறி மாறிதான் வருகிறது..
எக்காலமும் மாற மறுக்கிறது உன் நினைவு!!

Wednesday, 19 January 2011

குறிப்புகள்

பகலும் இரவும்..
மாறி மாறிதான் வருகிறது..
எக்காலமும் மாற மறுக்கிறது உன் நினைவு!!

கன்னங்கரு மனிதர்களும்..
வளர்ப்பதற்கு தேடுவது என்னவோ-வெள்ளைதோல் நாய்களைதான்!

நான் நானாகவே இருப்பேன்.. நீ இல்லாவிடில்!
நீ இருந்தாய்..நானும் நீயாகி போனேன்...

Tuesday, 11 January 2011

வரவில் உறவு!

சில வருடம் முன்பு.. எனது சகோதரி ஒருவருக்கு நான் எழுதிய கடிதம்..அவர்களின் குழந்தையை கண்டெடுத்ததை முன்னிட்டு!!

கை கால் முளைத்த சொர்க்கம்..

பொக்கை வாய் சந்தோசம்..

தவழ்ந்து வரும் கடவுள்..

தத்தி தடுமாறி நடக்கும் நந்தவனம்..

வெள்ளை சிரிப்பில் கொள்ளை கொள்ளும் தேவதை..

இனி உன்னிடத்தில்!

தாய்மை..

கர்ப்பம் தரிப்பதில் மலருவதல்ல..

மனம் மலருவதால் வருவது!

தாயிலா குழந்தைக்கு தாயாகி..போன ஆணும்..தாய்மை பேரடைந்தவனே!

அவள் சிரித்தாள்..யாழினி!

நடந்தாள்..நந்தினி!

அவள் என்றும்.. வளர்மதி!

விளங்குவாள்..நிறைமதியாய்!

கடவுள் உனக்களித்த.. அருள்மொழி!

இராகங்கள் ஒருங்கினைந்த.. இராகவி!

நாகரீகமாய்..நந்தனா!

இவள் புரிவாள்..நர்த்தனா!

உன் இன்பத்தின் .. வந்தனா!

தினம் நீ கூறும் சந்தியா வதனம்!

இவள் கூந்தல்.. கார்குழலி!

பூக்கள் விரும்பும்..பூங்குழலி!

நினைவுகளில்..நித்யா!

வித்தைகளில்..வித்யா!

உனை நோக்கி வந்தது..குழந்தையல்ல!!!

கடவுளின் நம்பிக்கை!

ஆம்

பிறக்கின்ற இடமும்..

வாழ்கின்ற இடமும் ..அவனது முடிவு!


Friday, 7 January 2011

போகி..தீ

போகி..திரு நாள்..

பழையன கழிதலும்..புதியன புகுதலும்..

மக்கும் குப்பை..மக்கா குப்பை

வேறுபாடு பார்க்கா எரியும் தீ

நான் என்ன எரிப்பேன்..

அடிக்கடி அடுத்தவரை எரிக்கும் என் கோவத்தையா??

எதையும் செய்யா வேடிக்கை பார்க்கும் கையாலாகாதனத்தையா??

முன்னதை எரித்தால் பின்னவனாகி போவேன் முழுமையாய்..

பின்னதை எரித்தால்.. நான் தீ.. விரவாதி..

தீரா வியாதி அரசாங்கங்கள்..கொள்கைகள்

மக்கள் பணி செய்தால்..சிறைதண்டனை-''மாமனிதன் பினாய்க் சென்''

ஐந்து கொலை செய்துவிட்டும் சரணடைந்தால்..பொது மன்னிப்பு-நக்ஸலைட்

அந்த ஐந்துப் பேரில்..அரசியல் வியாதிகள் இருப்பின் கிடைக்குமா மன்னிப்பு??

இம்மென்றால் பின்னதை எரித்து ஆவேன் தீ!

யாரை அழிப்பேன்..?

என் இன கருவழித்தவனையா..

இல்லை உடன் இருந்தவனையா..

காட்டிக் கொடுத்தவனையா..

கூடி கூட்டமாய் கெடுத்தவனையா..

வாய்ப்பிருந்தும் தடுக்காதவனையா..

தவறு என்று தெரிந்தும் தட்டிக்கொடுத்தவனையா..

இலவசம் பெற்று ஓட்டிட்டு..இனப்பற்றை காட்டாத என் மக்களையேவா..

என்ன செய்வேன்..இப் போகிக்கு???

எதனை எரிப்பேன்..

ஒருவனுக்கு உணவில்லாவிட்டால் ஜெகத்தினை அழி என்றான் என் கவி

ஒரு கூட்டமே கையேந்தி நின்றும்.....

உள்ளொன்று வைத்து.புறமொன்று நடிக்கும் நடிகனை..

அருகில் தவறிருந்தும் கேட்கா என் அறிவுகோழைதனத்தை

வறியவர் மீது வரா அன்பை..

கொடியவர் மீது கொள்ளும் மரியாதையை..

எங்கிருந்தோ பொசுக்கென முழைக்கும் பொறாமையை..

வேண்டா காமத்தை..

உதவாத உள்ளத்தை..

போகியே எடுத்து போ..எரித்துபோ..

புதியன வேண்டாம்..

அதிகமில்லை 50 வருடம் முன்னிருந்த..

மனித மனங்களை தா..

என் மனிதர்களை தா.