Saturday, 9 September 2023

பணப் பேய்

 வெறுமையை தூவி செல்லுகிறது தனிமை..

எதனை அடைகிறேன் என்றே தெரியவில்லை

மனதின் பாரங்களை ஏற்றிவிட்ட ஆசைகளை 

கொல்லாமல் கொல்லுகிறேன்..

அவை இறக்கமாலே பல்கி பெருகும் வைரஸாய்

உனக்காய் தோன்றிவிட்ட ஆசைகளை...

உன் பிரிவின் வலியில் நொறுக்க பார்க்கிறேன்..

பணமெனும் மாயப்பேயை கட்டி செல்ல முடியாமல்

தூங்காமல் தூங்க முயலுவேன்....

Sunday, 27 January 2019

உச்சியில்...
உக்கிரமாய் சூரியன்...
இருந்தும் காணவில்லையடி
என் நிழல்???
உனக்கு குடையாய்
தனித்தே தங்கிவிட்டது உன்னுடன்!!
நான் நிழலில்லாதவன்!!

Saturday, 24 June 2017


மிகு..தினங்கள் கழித்து..
வலிகள்.. நண்டாய் பிடிக்க
கிறுக்க சொல்லுகிறது.. மனது!!
இராட்டினம் ஏறும் முன்னே..
இறக்கிவிடப்பட்ட சிறு குழந்தை போல்
மனம் முழுதும் கண்ணீர் கோடுகள்!?
விரும்பும் பெண்
எதிரே வந்துவிட..
வலி மறைத்து புன்னகைக்க முயலும்..
விடலை பையன் போல
சிரிக்க முயல்கிறேன்..
வழி மறைக்கும்..
மார்கழி பனி போல
மனம்..முழுதும்.. கவலைகள்
கவலை கொன்று.. மகிழ்ச்சி வளர
ஆனையிட்டேன்..
கவலைகளோ..உத்ராகாண்ட் வெள்ளம் போல
மொத்தம் சாய்த்துவிடுகிறது...
மொத்தத்தில்..."முடியல சாமி"
என்ன வாழ்க்கைடா...இது????

Friday, 3 June 2016

துரோகம்

வானுலகம்...
150 புது தேவதைகளை...
63 பழைய தேவதைகள்.. கட்டி பிடித்து வரவேற்றன!!
அரும் பெரும் சாதனையென பாராட்டி தள்ளிய பழைய தேவதைகள்!!!
புதிய தேவதைகளுக்கு ஒன்றும் புரியவில்லை...
பழைய தேவதைகள் சொன்னது...
உங்களை போல் நாங்கள் கொல்லப்பட்ட போது...
இந்த உலகம்.. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது!!
நீங்கள் விழிக்க செய்தீர்கள்..
அதுவும்... இந்திய தேசத்தை... ராஜபக்சேவுக்கு கம்பளம் விரிக்கும்... அனைவரும் கூட வருத்தப்படுகீறார்கள்.. நீங்கள் தான் சாதனையாளர்கள் என்றன!!

புது தேவதைகள் சொன்னது....
அதற்கு நீ முஸ்லீமாய் பிறந்து முஸ்லீமால் கொல்லப்பட வேண்டும்!!!
நீ தமிழனாய் பிறந்து போனாய் போ என்றது!!

ரசவாதம்

இது என்ன ரச வாதமோ..
கண்ணாடி ரசம் கூட உன் முகம் மட்டும் காட்டுகிறது..
சவரம் கை கூட வில்லை இக் கண்ணாடியால்..
காதல் தோல்வியா..எனும் பரிகசம் ..
எப்படி சொல்வேன்..இது உன் நினைவின் வெற்றி என!!

Saturday, 30 August 2014

அம்மா அருந்தகம்...

அவனை
முகத்திலடித்து..
எழுப்பிவிட்டான்..
சூரியன்.

விண்ணென்று ..
தெரித்த தலைதனை
சிலுப்பி சிலுப்பி
ஒருவாறு விழித்தெழுந்தான்

தண்ணீர் துனைகொண்டு
தூக்க மயக்கம் கலைத்து
சட்டைபை துலாவுகையில்
சிக்கவில்லை..சில்லறைகள்.

வெறுத்து போய்
வெற்று கஞ்சிதனை
ஒற்றை வெங்காய துணையோடு
தள்ளினான்..இரு குழந்தைகளோடு

தலைவலியும்..உடல்வலியும்
சோர்வூட்ட..
கஞ்சி குடித்த குழந்தைகள்
கதவுக்கு அப்பால் தள்ள நடந்தான்

ராவைக்கு முன்னாடி..
நாலு காசோட வா..
நல்ல கஞ்சி குடிக்கன்னு
சொன்னா மயிலு.

ஆசையெதுவும் இல்ல
அவ மேல இப்ப
கட்டட வேலைக்கு போய்...
கழுத்தெலும்பு தெரிகையில
காம கண்ணு அக்கம் பக்க வீட்டுமேல

மூத்த பொண்ணு  எட்டாம்ப்பு
சின்னவன்  அஞ்சாம்ப்பு
பாசக்கார பொண்ணு
வாலு பய

ஒத்த வார்த்தையில
சொன்னான்.. இல்ல வேல
தலை சொரிஞ்சி..குழைஞ்சி
வளஞ்சி வசவு வாங்கினான்

100 ரூ பிடிப்பான்..
வழியில்ல பாவம் புள்ளக
மயிலு நோவாய்ல கிடக்க
 நல்ல சோறும்.. மருந்துதான்னான்

கடுப்பல இருந்தான் போல
மேஸ்திரி..முழு நாளும் வெயில
காங்கிரிட் உடைக்க.. உடைக்க
தல உடஞ்ச்சிச்சு அவனுக்கு

பரவாய்ல்ல மதியான சோறு
புள்ளக கூட சாப்ட்ற்றுக்கும்
பள்ளிகூடத்தில... பாவம் மயிலுன்னு
சொல்லி பாதிலயே  எந்திருச்சான்

கை நோக வேல
செஞ்ச காச பிடிச்சுதான் கொடுத்தான்
உள்ளுக்குள்ள கோவம்
நாளைக்கு வேலை வேணும்ல

பஸ் ஏறும் முக்கம்
முட்ட கட பாய் கேட்டாரு
ஏண்டாப்ப சரக்குடலயா
இல்ல பாய் மயிலுக்கு நோவுன்னான்

பாவி  பய பஸ்ஸுக்கு
10 ரூபா.. விடுடா நடைன்னான்
குறுக்கு தெரு சந்து முக்கம் டாஸ்மாக்கு பாரு
வறுத்த மீனு பாத்துபுட்டான்

புள்ளக மூஞ்சி வந்து போச்சு
400 ரூபால 300 அடிபாக்கெட்டுல
100 மட்டும் வச்சிகிட்டு
ஒரு கட்டிங்க் குடிச்சான்

மூளை சுணங்கி
2 குவாட்டரு சொல்லி
மீனை கடிச்சி
440 பில்லுன்னு சொன்னான்

லுங்கிய மாலையா போட்டு
ட்ராயர் பை காசும்
கம்னாட்டி பய கொடுத்துட்டு
உருண்டு உருண்டூ போனான்

ட்ராயருல ஒன்னுக்கு
முட்ட முட்டுசந்து பக்கம்
போஸ்ட்ர்ல் பூரா
முக்கால் வாசி துறந்துட்ட பொட்டைவோ

உச்சி முடி நட்டுகிச்சி
பக்கம் வூட்ட்டு ராசத்தி
முல தரிசனம் அப்படின்னு இப்படின்னு
பொலம்பி போனான்

சிக்கி சிக்கி நடந்தாம்
போதை இப்ப ரண்டாச்சு
சாராய போதை கண்ண மறைக்க
ராசாத்தி போத டிராயர் முட்ட

வெறியேறீ வீங்கிபோனான்
ஒரு மணி கூர்க்கா மூஞ்சில
டார்ச்சடிச்சி போனான்
வெளில பிரண்டு கிடந்தா
வெள்ள தோலு ராசாத்தி

இன்னைக்கு உட மாட்டன்னு
வாய உட்டு சொன்னான்
மூர்க்கமாதான் புடிச்சி புட்டான்
அவ சொன்ன சொல்லு ஏறலய..

சத்தம் கேட்டு மயிலு வந்தா
இழுத்து பாத்தா..தடுத்து பாத்தா
எத்தி உட்டான்.. பாவி மக
பத்தடி தள்ளி உழுந்தா..

இந்த நேரம்..
ராசத்தி உள்ள போய் கதவடைக்க
வெறி கொண்ட பய..
மயில இனும் ரண்டு மிதி மிதிக்காம்

கொஞ்ச நேரம் ஆவல
பாவி பய மூஞ்சு மேல
தண்ணி ஊத்தி.. நாலு தட்டி தட்டி
விலங்கு மாட்டுனான் டாணாகாரன்

பயலுக்கு ஒண்ணும் விளங்கல..
முழிக்காம் அழுறாம்
வூட்டு பக்கம் கூட்டம்
மயில சுத்தி ஒப்பாரி

உண்மையாம் அழறான்
உடமாட்றான் டாணாகாரன்
செயிலுக்கு போற முன்ன
புள்ளகள பாக்கனும்ன்னு அழறான்

அத கேட்டு ..
இன்னும் ரண்டு மிதிக்காம்
டாணாகாரன்
புலம்பி கிடக்காம்..குடிகாரன்

ஒரு பயலும் இவங்கிட்ட பேசல
பாவமா அழறான்..
போதையில அடிச்சன்
நோவுக்காறி போயிட்டாளேன்னு அழறாம்

அந்த மேஸ்திரி பயதாம்
கிட்ட வந்தான்..இந்த பய சொன்னான்
அண்ணன் ..நீ பிடிச்ச 100 ரூபாய புள்ளககிட்ட கொடு
ஏதாவது சோறு திங்கும்ன்னு அழறான்

அட பாவி குடிகாரா
உன் புள்ளய தாண்டா கட்டிபிடிச்ச
தடுத்தவள சங்கில மிதிச்ச கொன்னுட்டிய
நாய் சென்மம்டான்னு திட்ட

விஷயம் புரிஞ்சிடுச்சி..
விஷம் சாப்பிட்ட கணக்காம் துடிச்சான்
மூஞ்சிலடிச்சு அழுதான்..
முட்டி முட்டி ரத்தம் வர அழுதான்

இனி அவன் குடிக்க மாட்டான்
செயிலுக்குள்ள டாஸ்மாக் வராதுல்ல?????


 இது..அதீத கற்பணையன்று.. அங்கொன்று இங்கொன்றாய்  நடக்கும் பாவமே...

3 வயது ஆண்  குழந்தைகள் தேனி மாவட்டத்தில் ஆற்றில் அடித்து செல்லபடவில்லை
வன்புணர்வில் கொல்லபட்டிருக்கிறார்கள். கொலையாளி கண்டிப்பாய் மது நோயாளியாய் இருப்பான்.
வாழ்க தமிழகம்..தமிழினம்!!!

புலம்பல்...

புன்னகைக்கு பின்..புகைகிற மனமிருத்தலை
கண்டு..கண்டு சோர்வுற்றுள்ளேன்
ஒரு வகையில் நானும் அவர்களை போல்
பொய்யாய் சிரித்து.. பேசுவதால்
என் உணவை யாரும் திருடவில்லை..
என்று இறுமாந்திருக்கிறேனா??? ஏமாந்து இருக்கிறேனா???
பொறாமை தீ...
கொண்டவனையே... மூச்சிடைய வைக்கிறது
ஏறிகொண்டுதான் இருக்கிறேன்..
உயரம் வரவேயில்லை..
சறுக்க வைத்த மனதுகளுக்கு நன்றி!?
எதிரில் இருப்பவர் எல்லாம் எதிரிகளா..?
இல்லை..
எதிர்ப்பவர்கள்..எல்லாம் எதிரிகளா???
குழப்பத்திலே.. உலகம்!!???
எனக்கு..பிடிக்காத மனிதர்கள் பலருண்டு...
ஆனால்
எதிரியென்று எவருமிலை..
என்னை.. "நான்" தின்று விழுங்கும் போது
எதிரியென்று சொல்ல எவருமில்லை..!!
என் தோல்விகள் அனைத்தும் வெற்றிகள்தான்..
சிலர் அதை முயலாமல் இருப்பதாலே!!
பலரின் வெற்றிகள்.. என் தோல்விகளே
நான் அதை முயலாமல் இருப்பதாலே
இங்கு வெற்றியாளன் என்று எவருமில்லை..
தோற்று போனவனும் யாருமில்லை???
இரவில் உறங்கி... விழிப்பதே
உறக்கத்தை வெல்வதே..
காலம் ஒரு காட்டாறு..
நீர் வரும் போது வேகம்..
இல்லையெனில் வற்றல்
வற்றி வற்றி வாழ்வதுதான் மனித விதி..
இதில் மனிதம் மறப்பதா நியதி??
மனமே..
காட்டாற்றில் நீர் வரும் ...
உன் வியர்வை வெற்றி தரும்!!