Sunday, 15 August 2010

என் காதற் கரு

பத்து மாதம் கடந்தும்..

பல நாளாய்..

பிரசவிக்காத கரு...

நான் கொண்ட காதல்!

கடைசி இருமாதங்கள்..

முட்டி உதைத்து..

வலி தரும்..பெண்ணின்

வயிற்றுக்கரு..

உனை நெஞ்சில்..

நினைத்த நாள் முதலாய்..

ஒரு கணம் கூட குறையாத..

நெஞ்சு வலியாய்...என் இதயக்கரு!

உன் நினைவுகளால்..

நெக்குருகி....

தானாய் வழியும் ..."கண்ணீர்"

ஏன் எனும் கேள்விகளுக்கு

விடையளிக்க திணருகிறேன்..

சொல்லா சோகம்...

சுகம் என்ற போதும்...

தானாய் வழியும் கண்ணீர்...

தூக்கம் துறந்த விழிகள்..

சவரம் மறந்த முகம் என..

மற்றவர்களுக்கு சொல்லி விடுகிறது..

நானொரு காதல் "கர்ப்பஸ்திரன்" என்று!!

பிரசவித்த உடன் ..இறக்கும்

சிசுவாககுமோ.."என் காதல்"

என பயமுற்று..பிரசவிக்க மறுக்கிறேன்!!

பிரசவிக்க மறுக்கும்/மரிக்கும் கருவினை..

சிசேரியன் செய்வார்கள் பெண்களுக்கு..

"என் காதலுக்கு"..????

நீ மறுத்தாலே...

மரித்ததாகி விடும் என் காதல் கரு..

அதனின் பெயர் சிசேரியன் அல்ல அது என் "போஸ்ட் மார்ட்டம்"

பிரசவிக்கவா..காத்திருக்கவா???


என் இளைஞன்...என் இளைய பாரதம்..

எதிர் கால இந்தியா..

இளைஞர்களின் கையில்!!!

புகையும் சிகரெட்டை காணதவர்கள் சொன்னது!

தண்ணியடிப்பது தவிர்க்க முடியாதது..

ஆகி விட்டது என் இளைஞனுக்கு......

தள்ளாடுவது எந்தன் தாயகமும்!!!

தேர்தல்..படித்தவனுக்கு

ஒரு மணி நேர வேலை..மீத நாள் விடுமுறை!!

பாமரனுக்கு..

பட்டினி கிடப்பினும் அவன் கட்சி தேறனும்!!!

பள்ளியில தேறாத கேஸ்ல்லாம் சட்டம் இயற்றும் இடத்தில்!!

சினிமாவில் கொஞ்சம்..

சின்ன திரையில் கொஞ்சம்..

கிரிக்கெட்டில் கொஞ்சம்..

கெட்ட வெப்சைட்டில் கொஞ்சம்..

முக நூலில் மிச்சம்..தொலைத்தோம் எங்கள் நாட்களை..!!

சகிப்பு தன்மை வளர்ந்து விட்டது...

சாக்கடையெல்லாம் தலைவனாய்...

வீரமான இளைஞன் எல்லாம்..

அவனது கைதடியாய்..ரவுடியாய்..!

விதி மீறலை..விதியாய்

மதி மறந்து சூல் நிலை கைதியாய்

வாழும் இளைய பாரதம்...

வாழ்க சுதந்திரம்!!!

Friday, 13 August 2010

கடல்..

கரை மீது என்ன.. மோகம்..

இந்த அலைகளுக்கு..ஓயாமல் வருகிறதே!

எதனை எட்டிப்பிடிக்க..

இத்துனை படையெடுப்பு..!

ஓய்வு தேவையில்லையா..உனக்கு?

உன்னிடத்தில் ஓய்வெடுக்க..

எத்துனை சோம்பேறி..மனிதர்கள்!!

எத்துனை காலடித் தடங்கள்..

உனை காண வந்தவர்களால்...!!

அது என்ன..உன்னிடத்தில் மட்டும்.....

சோகத்தை தணிக்க

இன்பத்தை கொண்டாட

காதல் செய்ய

ஓய்வு எடுக்க

விடுமுறை கழிக்க

இரகசியமாய் சந்திக்க

இப்படி அத்துனை செயலுக்கும்..

உன்னிடத்தில் என்ன மோகம்!!!??

ஏதோ உன்னிடத்தில்???!!!

Tuesday, 10 August 2010

காதல் பாடல்

இது அன்பு நண்பர் senthuvj மண்டய பிய்த்துக்கொண்டு மெட்டமைக்க எனது அன்பளிப்பு!
நண்பா..இது ஒரு situation song..& stage song. அதாவது..கல்லூரி மேடையில் தன் காதலை வெளிபடுத்தும் விதமாய் அமைகிறது!(copy rights எனக்குதான் he hee)

பல்லவி
ஏய் பெண்ணே..ஏஹே பெண்ணே
ஏன் வந்து சேர்ந்தாய் இங்கு...!
நான் வந்து சேர்ந்த..தாலா நீயும்
வந்தாய் பின்னே!
சரணம்:
கண்ணில் கண்ட பிம்பம் எல்லாம்..
காற்றோடு போகும் நேற்று...
இன்று மட்டும் என்னில் மாற்றம்
ஏனோ..பெண்னே..ஏனோ??
இந்த மாற்றம் என்னில் வந்தது ஏனோ?!

காதல் சொல்லும் உந்தன் கண்ணே..
கண்ட..தாலா பெண்ணே!!
( ஏய் பெண்ணே...)

இரண்டு நிமிடம் இதயத்துடிப்பு
நின்று ..போன..து..பெண்ணே!
ஒரு இரண்டு நிமிடம் இதயத்துடிப்பு நின்று போனது..பெண்ணே!
இயல்பை மீறி இதயம் துடிக்குது இதய..மே!!
என் உதிரத்தில் கூட..உன் பெயர்தானே..
..உயி..ரே...!
என் உயிரில் கொஞ்சம் இனிப்பை கலந்தாய்
கண்..ணே,..
(ஏய் பெண்ணே,...)
காதல் பெண்ணே..காத..ல் பெண் ணே
காதல் சொல்வாய் கண்ணே..
காதல் பெண்ணே..காதல் பெண்ணே..காதல் சொல்வாய் கண்ணே
காற்றும் சொல்லும் உந்தன் காதில்
எந்தன் காதலை ..கண்ணே..
காற்றும் சொல்லும் உந்தன் காதில் எந்தன் காதலை கண்ணே

எந்தன் காதலை கண்ணே..
எந்தன் காதலை கண்ணே..
காதலை கண்ணெ..காதலை கண்ணே..காதலை கண்னே,..
கண்ணே..கண்னெ..என் காதல் பெண்ணே!

(அன்பு தோழா..வார்த்தைகளின் ,எழுத்துகளின் இடை வெளியில் என் எதிர்பார்ப்பினை சொல்லியிருக்கிறேன்.. இதை எழுதி 7 வருடம் ஆகிறது..இது என் காதல் ஏக்கம்.. வெளிபடும் உன் இசை வடிவத்தில் என நம்புகிறேன்

Monday, 9 August 2010

மன சாட்சி????

உந்திய உணர்ச்சிகளால்
ஊனமாகி விட்டது உள் மனது!
ஆனாலும் .....
அடிக்கடி முள்ளாய் குத்துகிறது..
பாழ் மனது...
கற்பு வட்டம் தாண்டிய பெண்களை..
கண்கள் தொடரும் போது குருடாகிறது..
தொடரும் உணர்ச்சிகள்..
பய உணர்ச்சியில் தோல்வியுற்ற பின்..
ஆங்காரமாய் விழித்து ஊமையாய் அலறும்!

தவறு முயற்சிகள்..
தோல்வியுற்ற பின்னும்...
தொடர்ந்து துன்புறுத்தும்..
அடுத்த முயற்சி தொடங்கும் வரை!!!???

நித்திரை எனும் மரணம்

நித்திரை..
நித்தம் நிகழும்..
மரணமும் ஜனமும்..
நித்தம் வைத்தான் இரவு மரணத்தை
மீளாதுயில் ஒரு நாள் நிஜமென உணர்த்த
உணராத மனம் தினம் ..பயந்தது மரணத்தை கண்டு

மரணித்து ..ஜனனித்தேன்....
மறந்திருந்தேன் முன் ஜென்ம கோபதாபம்
இரவில் மரித்து..விடியலில் ஜனனித்தேன்
மாறவில்லை முதல் நாள் விருப்பும் வெறுப்பும்!?

Saturday, 7 August 2010

மரிக்கட்டும்..தமிழ்

கனவுகள் கலைந்தனவா..
மேகங்கள் மழை பொழிய மறுத்தனவா..
சூரியன் உதிக்க மறுக்கிறதா..
வெம்மையாய் மாறியதா இரவுகள்..
கசக்கின்றனவா கரும்புகள்..
குருதி காயாத மண்ணில்..குருத்துககள் இனி வருமோ
இழப்புகள் கண்ட பூமி..இனி இனிப்புகள் கானுமோ
மயான அமைதி கொண்ட மண்..இனி மன அமைதி கொள்ளுமோ
அழகான காதல் பூக்குமா..குருதி வாசமில்லா கவிதை வருமா
ஓ..இறைவா..அழிதொழிக்கும் உன் தொழில் பசி அடங்கியாதா..
சிதறிய கண்மணிகளில்..கலையாத கனவு காண்..
உன் மரணக் கயிறில் சிக்காதவர்களுக்கு..சிரிப்பை தா..
வருடம் முடிந்தும்..வயிற்றில் பசி அரக்கன்..
எங்கோ கையில் காப்பி கோப்பையோடு.."முடிவல்ல தொடரும் என்றான்"
சொந்த பூமியில் நீர் குடிக்க அனுமதி வேண்டி..
எம் மொழிக்கு என்று கடவுளை வைத்தோம்..மொழியை கடவுளாய் துதித்தோம்..
அழிக்கும் தொழில் மட்டும் அழகாய் செய்தாய்..
ஆடுகளாய் இருப்போம்..இரப்பொம்..இறப்போம்..
அடிமையாய் ஒரு கூட்டம் படைத்திட்டாய் அதை அழித்திட எமையழித்தாய்
ஒரு நொடியில் மாறாதா இன்னிலை..
என் மீதகூட்டம் மரிக்கும் முன் ..மரிக்கட்டும் என் உயிர் தமிழ்!
வாழட்டும் ஒரு கூட்டம் வலியற்று

Friday, 6 August 2010

சராசரி..மனிதர்கள்...!!!

புதிய நண்பர் ஒருவர்
என் அறைக்கு வந்திருந்தார்..
எனை அறிய விரும்பி..
நான் வாசிக்கும் புத்தகங்களை கண் நோக்கினார்!

பார்வையிட்டுக்கொண்டே..
பாரதி விருப்பமா என்றார்..?
மிகுந்த பற்று என்று..பவ்யமாய் பதிலளித்தேன்!

விவேகானந்தரை..
அறிந்துள்ளாய் போல என்றார்...?
அறிய முயல்கிறேன் என அடக்கமாய் கூறினேன்..!

என் கவிதைகளை..கண்டுணர்ந்து..
கவிஞனோ என்றார்...?
முன் ஜென்மம்..கம்பனின் கைதடி யான் என கர்வமாய் பகன்றேன்!

என் குணமறிந்தீரா..இம்முறை நான் வினவ..??

சொல்லில்...நேர்மை..
உள்ளத்தில்..தூய்மை...
நெறிமுறை ..வாழ்க்கை..இவையே..உன் குணம் என்றார்!

என் உள்ளம்..
உவகை கொள்ளவில்லை..உறுத்த தொடங்கியது.......

நல்லவேளை..
என் நாட்குறிப்பேட்டை அவர் பார்க்கவில்லை?

பார்த்திருந்தால்.....

மனதளவில்..
என் கற்பு கறைபட்டதை கண்டிருப்பார்..
கனவுகளில்..
கன்னிகளின் கற்பை நான் களவாடுவது கண்டு அதிர்ந்திருப்பார்..
ஒழுக்கத்தின் எல்லைகோட்டை..
ஒவ்வொரு நாளும் தாண்ட முயற்சிப்பதையறிந்து தவித்திருப்பர்...

பாரதியை பார்க்கும் கண்கள்..
ஷகிலாவை காண்பது கண்டு சினந்திருப்பார்...
முரண்பாடுகளில்..
மூழ்கி கொண்டிருக்கும் எனை மீட்க முயற்சித்திருப்பார்..
என் அக அழுக்கை..
அகற்ற அறிவுரை வழங்கியிருப்பார்..

என எண்ணி..
பல நாள்...வெட்கிதலைகுனிந்திருந்தேன்..
இன்று அதற்காய் சினந்தேன் எனையே??

அவரை..
அடுத்த வரிசையில்..
அந்தப் பட திரையரங்கில் பார்த்த பொழுது!!

அவரும் சராசரி மனிதர்தானோ!!!

இனி என்ன செய்வாய் தமிழா!!???

என்ன செய்தாய்?
கொத்து கொத்தாய் கொன்ற போது..
என்ன செய்தாய்..?
திரைபடத்திற்கிடையே..காட்டிய செய்தி தவிர்த்தாய்..
சில தன்மானத் தமிழன் உயிர் நீத்த பின்..
ஒரு சில துளி கண்ணீர் வடித்தாய்..
ஒரு மணி நேர தூக்கம் தவிர்தாய்..
ஒரு கவளம் உணவு மறுத்தாய்..!
மறு தினம்..
இருமுறை புணர்ந்தாய்..
அனைத்தும் ஈடுகட்டினாய்..!

தேர்தல் திருவிழாவில் தன் மானம் தொலைத்தாய்..
பொய் சண்டையிடும் நாயகனை தலைவனாய் ஏற்றாய்..
தமிழினம் காக்க வந்தவனை மறந்தாய்..மறுத்தாய்..தவிர்த்தாய்!!?
கனவினை நகரமாய் நெய்தவன் அவன்..
வீரத்தமிழினம்..வெற்று வார்த்தையில்லை என மெய்பித்தவன்!

மெய்யா.....இல்லை பொய்யா...????

ஒரு சில நிமிடம் வருந்தினாய்!
இனி என்ன செய்வாய் தமிழா????
யுத்தம் முடிந்தது என இரு சினிமா பார்ப்பாயோ?
முள்வேலியில் மூன்று லட்சம்..தலைவிதி என விடுவாயோ?
முள்வேலியில் மானமிழப்பது..தவறல்ல என்பாயோ?
இளமையற்ற ஈழத்தை அமைக்கும் சிங்கள திறமையை வியப்பாயோ?

என்ன செய்வாய்...??
வந்தாரை வாழவைத்த தமிழினம்..
கையேந்தி நிற்பதை..தடுப்பாயா..அல்ல
தலைவன் வழியில் "கேட்டுப் பெற வேணும்" என்பாயோ?
இல்லை..இலவசத்திற்கு கையேந்துவதால்..கவலையற்று இருப்பாயோ?

இனி என்ன செய்வாய் தமிழா???
ஏதாவது செய்!!
மரண நிழல் படிந்த முகாமிற்குள்.. சிறு ஒளியேற்ற ஏதாவது செய்!
யாருடனாவது பேசு..மின்னஞ்சல் அனுப்பு..
ஒரு சில நிமிடம் தினம் செலவு செய்!
நெய்யூற்று..தமிழின தீபம் அணையாதிருக்க..
ஓரிரு சொல்லில் சுள்ளி கொடு...
தீபம்..தீயாய் மாறட்டும்..!!!!
அணையாது காப்போம்..தலைவன் மீண்டு வருவான்..!!
அவன் தோளில்..பாரம் இறக்கி வைத்து ..மீண்டும் உறங்குவோம்...

என்ன செய்வாய் தமிழா??
உறங்கி கழிவதும்..கூடி கலைவதும் உன் தொழிலாய்..!
நமீதா இடையழகா..இல்லை துடையழகா..?பெருங்குழப்பம் உனைகிறுக்க
என்ன செய்வாய்...ஈழத்தமிழுக்கு??
ஒரு தின ஊதியம் கொடுப்பாய்!
ஒரு நாள் போராட்டத்தில் ஓய்வெடுப்பாய்!
ஒரு நிமிடம் கவலையில் திரிவாய்!

என்ன செய்வாய் தமிழா???
ஏதாவது செய்ய வேண்டும்...
தமிழா உனை வசை பாடி.. எனை வசை பாடி..போதாது..
என்ன செய்வாய் தமிழா???

இவன்,

செய்வதறியாது மன்னிப்பு கோரும் ஒரு தமிழன்.

Wednesday, 4 August 2010

காதல் உளறல்கள்

நான் இந்த
உலகத்தை காதலிக்கிறேன்..
அவள் இங்கு மலர்ந்திருப்பதால்!

நான் காற்றை காதலிக்கிறேன்
அவளை தொட்டு அது வரும் போது மட்டும்!

நான் மின்னலை காதலிக்கிறேன்
அவளது கண்வீச்சை அது ஒத்திருப்பதால்!

நான் பூக்களை காதலிக்கிறேன்
அவளுக்கு அழகு சேர்க்கும் போது மட்டும்!

நீ எனை காதலிப்பதால்தான்..
இன்னும் எனை ..நான்
காதலித்து கொண்டிருக்கிறேன்..ஏன்
இன்னமும் அதனால்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்!

மன்னை செந்தில்..: ஆடி-18

மன்னை செந்தில்..: ஆடி-18

ஆடி-18

நான்..ஊருக்கு போறேன்..
தீவாளிக்கு பின் இப்பதான் போறேன்..
18க்கு போயி பல வருசமாச்சு..

பாவாடை தாவனியில்..
பவனி வரும் என் பசுங்கிளியை பார்க்கப்போறேன்..

கண் மூடி கடந்த வருடங்களை மென்றேன்..

சலசலக்கும்..காவேரி..
கல கலக்கும் தாவனிகூட்டம்..
அச்சாரம் போட ஆசையாய்..இளவட்ட கூட்டம்

என் வீட்டு காப்பு கயிறை
தாலியாய் நான் கட்ட..அதை நீ என் கையில் கட்ட
காவேரிதான் சாட்சி கரம் கோர்த்து நடந்த போது!

இதை பார்த்த என் வட்டம் ஒன்னு..
அடுத்த வீட்டு பொன்னுக்கு அச்சாரம் போட..
ஆயி போச்சே பெரும் கலாட்டா..நினைக்கையிலே கண்ணுக்குள் சிரிப்பு

நீ கட்டும் கயிறு..இத்து போகும் வரை நான் கட்டியிருக்க
என் அத்தை சத்தம் போட போட..நீ அணிந்திருக்க
ஆத்திரத்தில் உன் அம்மா அறுத்த பின்..
அழுதுக்கிட்டே புத்தகத்தில் நீ வச்சு வச்சு பாத்திருக்க

இன்னொரு அத்தை பொன்னுக்கு விளையாட்டா நான் நீட்ட
அதை பார்த்து கோவமாய் போன நீ தடுமாறி உழுத வயலில் விழ
சேறு பூசி நீ நிக்க..அடக்காமல் நான் சிரிக்க..கோபமாய் நீ அழ
நம்ம காவேரி ஆத்துல உன் முகம் கழுவி..நான் விடயில்ல
ரொம்ப நாள் ஆசையை கணக்கு பண்னி முத்தம் ஒன்னு வைச்சனே!

உன்னையும் ஆத்தையும் ஒன்னா நினைச்சே..நான் இங்கு வந்தேன்
முன்னே விட அழகாதான் நீ இருக்க..
என் மனசுதான் காத்துபோன பலூனாய் ஆனதடி என் காவிரியை பாத்து!

வீட்டுக்குள்ள படைச்ச மஞ்சக்கயிறு..மொத்தமா இருக்க
மொட்டை கழுத்தோட முன்னாடி நீ வந்தாலும்..
ஆத்தங்கரை சொர்க்கத்தை நினைச்சு ஆடாம நான் இருக்க
தனியாத்தான் நான் இருக்க..
பக்கத்தில சிலயா நீ இருக்க..
வறண்டு போன ஆறு போல வறண்டு போய் நான் இருக்க...

அடக்க முடியாத அழுகையோட....
ஏன் மச்சான் என்ன இப்ப புடிக்கலையான்னு..
சொறுவினியே இன்னொரு கத்தி..!
எப்படி புள்ள சொல்லுவேன் என் மனசு வேதனைய..

ஆத்து தண்ணிய வயக்காட்டுக்கு திருப்பி விட நான் போக
காப்பிதண்ணி நீ கொண்டு வந்த -ஆத்தங்கரை
சொர்க்கமாய் இருந்ததடி..அதை நீ நினைச்சு பார்க்கலையா

80 வயசிலும் ஏர்கலப்பை தூக்கும் என் தாத்தன்
உடம்பு சுகமில்லன்னு படுத்திருக்க..ஏன்னு நான் கேட்டப்ப
"போடா பயலே..காவிரில தண்ணிய கானோம்..
அது கொண்டு வரும் காத்தையும் கானோம்..சொக்கன் கிட்ட போனாதான்-
அந்த சொகம் வரும்னாரே" அதனால அடைச்சுபோயி நானிருக்கேன்

ஊருப்பக்கம் நான் வந்தா..விடக்கோழி அடிக்கையில-
உன்னை விரட்டி விரட்டி வேலை வாங்கும் என் அம்மா சத்தம் கூட குறைஞ்சு போச்சு
பட்டணத்து பய வந்திருக்கான்னு பந்தாவா சுத்தி வரும் என் அய்யன்..
வானத்தை பார்த்து பார்த்து சும்மா இருக்கிறப்ப சுருக்குன்னு இருக்கு புள்ள

மாப்பிள்ளைக்கு கொண்டு வந்தேன் மயினின்னு சொல்லும் உன் அம்மாவ கானோம்
மாப்பிள என்ன சொல்ராப்புலன்னு மறைமுகமா கேக்கும் மாமன்-பொழப்புக்கு
வேற ஊர் போயிருக்கிறாராமே..?

அடி பாவி பொன்னே,,தளதளன்னு நீ இருந்தாலும்..
ஆத்து தண்ணில குளிச்சு நீ கொண்டிருந்த மினுமினுப்ப கானோமெ
உன் முகத்தில அதையும் தானே நான் பார்க்கிறனே.

தண்ணி வராத காவிரியால கலைஞ்சு போய் கிடக்கு ..
நிறைய காதல் ஜோடி..அதை நினைச்சு கவலையில் நான் இருக்கேன் புள்ள
அடுத்த ஆடி கழிஞ்சா நீயும் நானும் ஜோடி அதுக்குதான்-
உங்கப்பன் பொழைக்கப் பொயிருக்காகன்னு சொன்னப்பய நான் நொந்துட்டன் பொன்னு

அடுத்த ஆடியிலாவது ஆத்துல தண்னி வேணும்..
நீயும் நானும் அதுல கூத்தடிக்கணும்..
பிரிஞ்சு போன நம்ம இளவட்ட கூட்டம்..சேர்ந்து இருக்கணும்

உன் அண்ணன் புள்ளயோட..என் அக்கா மக்களோட..
நம்ம புள்ள விளையாட காவிரி இருக்குமான்னுதான் புள்ள-
நான் பரிதவிச்சு போயிருக்கன்

நதிதான் பிரிஞ்சி இருக்கா..இல்ல நாடும் பிரிஞ்சி கிடக்கா
நதியையும் சேர்த்திடுங்க நம்ம நாட்டையும் சேர்த்திடுங்க..
எழுதயில என் மனசே..பேனா மை கரையலியே..
என் உசுரு கரைஞ்சி போச்சு..

பொறக்கிற புள்ளக்கு -தாயா..
வயசு பசங்களுக்கு- முறைபெண்ணா...
வாழற வரைக்கும்-சாமியப்பா எங்க காவேரி!

காவேரி காஞ்சு போச்சு..
எங்க சாமிதான் சாஞ்சு போச்சு
எங்க உயிரெல்லாம் ஓஞ்சு போச்சு..
வேற சொல்ல தெரியல்ல...காவிரி தண்னி கண்ணுல

Tuesday, 3 August 2010

அருவி...

கரும் மேகத்தின்
வெள்ளை குழந்தை..!
கரும் பாறையை கடக்கும் போதும்
கறை படாத மேனி..!

பசும் மலைகளை கரைத்தாலும்..
பாசி படரா வெள்ளி மின்னல்.!
தரை தொடும் வரை..
தடை தகர்த்திடும் வேகம்..!

மலரம்புகள் நடுவே..
வழியும் தாவனியை விட அழகுதான்.....
மலைகளின்..நடுவே..
விழும் நீ!!!!