Friday, 28 September 2012

எழுத்தும்..நடப்பும்

எழுத்துகளை கண்டே மனம் பதைபதைக்க ..இங்கு வெள்ளை கார அரசாங்கமில்லை..
பாரதி எழுத்தும்..பகத்சிங் வீரமும் ஒன்றாய் கண்ட 
உண்மை ஆட்சி இல்லை இங்கு
மக்களை மதிக்காத ...அம்மையார்கள் ஆட்சி
நம் உரிமையை விற்று திங்கும் திருட்டு கும்பலாட்சி
தோரிய மண் விற்ற
கிராணைட் விற்ற
நிலகரி விற்ற..
சிறு வணிகத்தையும் விற்கும்
கள்ள காதலுக்கு பிறந்தவர்களின் கையில் நாடு
அதனில் நாம்..
பதவிற்காய் பெண்மணிகளின் இல்லை பெண்கல்லின்
பாதம் பணியும் வீர ஆண்மகனை கொண்ட நாடு..
என் எழுத்து மட்டும் என்ன செய்யும்..
காசிற்காய் தாய் விற்க துணிந்த இக்கூட்டத்தை????

தோல்வியில்..வெற்றி

தோல்விதனை..நியாயப்படுத்த
ஆயிரம்.. காரணங்கள்
ஆனால்..அவற்றினால்
ஒரு..வெற்றியினை.. தரஇயலாது!

வெற்றி..காரணங்களால்.. கிடைப்பதில்லை
காரியங்களால்.. கட்டமைக்கப்படுகிறது.

பெரும்..பெரும்..திட்டங்களை..வி
ஒரு சிறு செயல்...வெற்றியினை...தந்துவிடும்!

Monday, 10 September 2012

தனிமை கிறுக்கல்

வெறுமையை தூவி செல்லுகிறது தனிமை..
எதனை அடைகிறேன் என்றே தெரியவில்லை
மனதின் பாரங்களை ஏற்றிவிட்ட ஆசைகளை 
கொல்லாமல் கொல்லுகிறேன்..
அவை இறக்கமாலே பல்கி பெருகும் வைரஸாய்
உனக்காய் தோன்றிவிட்ட ஆசைகளை...
உன் பிரிவின் வலியில் நொறுக்க பார்க்கிறேன்..
பணமெனும் மாயப்பேயை கட்டி செல்ல முடியாமல்
தூங்காமல் தூங்க முயலுவேன்..

தளரா மனம்...

வழி தவறும் பறவைகளின்...
இறக்கைகள் வலுவனாதாய் மாறி போகிறது!!
தனிமைப்பட்டு போகும்.. களிறு..
மூர்க்கமாய் மாறி போகும்!!
அடிப்பட்ட நாகம்..அதிகமாய் சீறும்!!
மாதா மடிபிரிந்த மந்திகள்
மனமுடைந்து மாய்வதில்லை..!!

அறிவால் உயர்ந்த மனிதா..
தோல்வியில் ஏன் துவண்டு போகிறாய்???
தடைகள்தான்.. தளரா மனம் தரும்...
துயரம்தான்.. நெஞ்சுரம் தரும்...
தோல்விகள்தான் வெற்றி வேட்கையளிக்கும்

வெற்றிக்கான விடியல் நாளையே கூட இருக்கலாம்!!!