Tuesday, 20 March 2012

பூமி...


சுற்றி கொண்டேயிருக்கிறது...
சுற்றி சுற்றி ஓய்ந்து விடாமல் .. வேகம் கூட குறைந்து விடாமல்
சுற்றி கொண்டேயிருக்கிறது..
ஓய்வெடுக்க இரவை அமைத்து கொடுத்துவிட்டு..
ஓய்வென்றி..சுற்றும் பூமி!!!!

சச்சின்..


நூறில் நூறு..
நூற்றுக்கு நூறு.. 100/100
சொல்லும் போதே துடிக்கும் மனம்

பல வருட பள்ளி கனவு.. பலருக்கு
பள்ளியில் வாங்கவில்லை
அதனால் வாங்கி விட்ட .. நூறு

அடித்து எழுதினால் கிடைக்கும் முட்டை
அடித்து அடித்து ஆடினால் கிட்டும் நூறு!

கல்லூரி முடித்த பின்னும்..
முதல் வகுப்பு மாணவனாய் .. பயிலும் அடக்கம்
பலவருடம் பார்த்தும் அலுக்காத ஆட்டம்

காதலி மனைவியானல்
சலித்து விடும் மானுட காதல்
பல வருடமாய் சலிக்காமலே உன் காதல்

பதினாறில் தேடும் பலகனவுகள்..ஆசைகள்
பதினாறு தொடங்கி 22 வருடமாய் ஒரே கனவு ஆசை

குடிக்காத தலைமுறை இலாமல் போகும் அபாயம்
அபயமாய் கோடிகள் மறுத்தாய் குடி வெறுத்தாய்
சத்ய குடிமகன் நீ..

கனவுகள் மெய்படும்.. ஒரு நாள்
அன்னாள் வரை அதனை துரத்துங்கள்
எத்துனை உண்மை.. உன்னால்
உனை போல கனவை துரத்தட்டும் ஒரு தலைமுறை..!

தவறு செய் மனமே..


செய்துவிட்ட தவறுகள் வருந்தி ஓய்ந்த பின்
செய்ய வேண்டிய தவறுகள் வரிசை கட்டி நிற்கும்
ஓய்வெதும் வாழ்வதும் தவறுகள் வழி
தவறி செய்த தவறுகள்..
தவறாமல் செய்வது வாழ்க்கை முறையாய்...
சரியாய் தவறு செய்ய கற்ற கொள்வதே லட்சியமாய்!!

Tuesday, 13 March 2012

ஈழமும்..இறைவனும்!!!


கொட்டிய வார்த்தைகளை திரும்ப பெற..
மனிதனுக்கு வழியெதுமில்லை..
அது போலத்தான்

எழுதிய எழுத்தை அழிக்க இயலாமல்
தூக்கமின்றி தவிக்கிறேன்..!!!???

இறைவன் சொன்னது..
ஈழத்தமிழனின் நிலை குறித்து..???

FB கிறுக்கல்


கனவுகள் ...
இனிப்பானதோ.. கசப்பானதோ..
அவை தூக்கம் உண்ணும் பட்சிகள்!!

என்னென்ன வார்த்தைகள் சொன்ன பின்பும்
கவிதை தமிழில் காதலுரைத்த பின்னும்
கம்பன் விட்ட வருணனையை கண்டுணர்ந்து சொன்ன பின்னும்
தடுமாறி தோற்று போகிறது...
உன் அழகான மௌனத்தின் முன்
என் ஆடம்பர வார்த்தைகள்..!!!

நான் தமிழ் கவிஞன்


முழுமையாய்.. பாரதி படிக்கவில்லை
கம்பன் ஊறுகாய் போல கடித்ததுண்டு
இலக்கணம் அறிந்தால் தலைகணம் வருமென்று விட்டேன்
தமிழுக்கு மதிப்பெண்ணால் ஒரிரு நாட்கள் வந்திட்ட இலக்கியம்
மனப்பாடமில்லையெனில் இந்த சில குறளும் உளறளாய்தான்
நான் தமிழன்.. மேலும் கவிஞன்!!!!!!