Tuesday, 31 May 2011

அலையாடும்....கடல்!!

அலை அடங்காத..கடல்..

நுரைத்து நுரைத்து பொங்கியும்..

கரை.. கரைக்கும்..அலை,,

அள்ள அள்ள மீனும்.. நண்டும்..

சிப்பியும்..பவளமும்..

வலை அறுக்கும் மீன்கள் அறும் அளவும் மீன்கள்..

அலையாடி கரைதலை வைத்து காற்றாடி..

மல்லாந்து நட்சத்ரம்பார்த்து நாள் பார்க்க..

கால் சட்டைகாலத்தில் கடல் பார்ப்பதே கனவு..

முழுகால் அணிந்த பின் தாவனிதான் கனவே

படிபபு கனவாய் போகாமல்..காப்பதேஒரு கனவாம்

தலையால் தண்ணி குடித்து..

தடுமாறி பள்ளிதாண்டி..பட்டம் படிக்கையிலே

பட்டத்தின் வால் போல நீண்டன ஆசைகள்..

பல பேப்பர்.. மீதம் இருந்தாலும்..ஒரு காதல் தேறீ

பின் கல்யாண ஆசையில் பட்டம் வாங்கி..

பல சுற்று பேசி..கனியவளை கரம்கோர்த்து

கண்ணாட்டி கண்ணாடி வளையணிய ஆசையாய்

கனவாம்..வாரிசும் வந்திருக்க

வாடகை வீடாம்..பெரும்கனவாய் குடும்பமும் ..

பொதிசுமக்க ..நானாய் கட்டிக்கொண்டேன் அரபு கயிறு,,

ஆசை ஆசையாய் 5 வருடத்தில் கட்டிவைத்து..

கால் வைக்க..கை கழுவி வந்தேன்..எம்பெரும் கனவு

சில மாதம் வீட்டில்துய்ந்து..பணிதேடி

மாதமிருமுறை..புணர்ந்து..தலையனையில் கார் கனவாய்

நல் பள்ளி கனவாக..

வேர்களின் உடல் நலம் ஒரு கனவாம்...

கனவுகள் சேர தொடங்க "எம்பெருங்கனவு" கரைய

கயிற்று விட்ட அரபு கயிறு அரை ஞான் கயிறாய் ஆகுதடா

அலை விட்ட கடலும் காணோம்..ஆசைவிட்ட மனசையும் காணோம்

அலையாடும் ..கடல்..ஆசையாடும் மனம்!!


Monday, 30 May 2011

சின்ன சின்ன கிறுக்கல்கள்...

மின் அமர்ந்த..இருளில்
நிலாகாற்று ஒளியில்..மொட்டை மாடியில்..
நிலா சோறு.... அவளொடு
மின் வாரியம் ..வாழ்க!

இது என்ன ரச வாதமோ..
கண்ணாடி ரசம் கூட உன் முகம் மட்டும் காட்டுகிறது..
சவரம் கை கூட வில்லை இக் கண்ணாடியால்..
காதல் தோல்வியா..எனும் பரிகசம் ..
எப்படி சொல்வேன்..இது உன் நினைவின் வெற்றி என!!


ஒரு அறிகுறி கூட இல்லை..
ஒரு சலனமும் இல்லை..அது சாத்தியமா கூட புரியவில்லை...
ஒரு ஒரப்பார்வை..சின்ன இதழ் பிரிந்து தெற்றுபல்புன்னகை..
ஒரே ஒரு நொடிதானே...
ஓராயிரம்..பூகம்பமும் சுனாமியும்..ஒன்றாய் வந்து
சின்னா பின்னமாய்..சிதைந்த மனதுடன்.. நான்!!

உன் சிரிப்பில்..
சிந்துவது முத்துகள் அல்ல...என் கவிதைகள்!
ஈர உதடுகள்..விலகி..முத்து பற்கள்
கண்ணுறும் போதெல்லாம்..
முத்தமிடும் எண்ணத்தை முந்துவதுஎன் கவிதைதான்..
மோகத்தில் விளைந்த கவிதையை..
"வாய் சொல் வீரன்" என பகடி செயிகிறாய்!

தமிழகமெங்கும்..பெய்த "வெப்பம் தூக்கி மழை"- தோற்றிருந்தது
முகனூலில் பொழிந்த என் நட்புகளின் வாழ்த்து மழையிடம்...!!

நாளை காலை இரத்தபரிசோதனை..
இத்துனை இனிப்புகளை உண்டபின்.."சர்க்கரை" வரமாலிருக்குமா???
அவளின் அன்பு முத்தங்கள்...

முருகப்பெருமான்..படத்துடன்..
அப்துல்கலாம் நகர் விளம்பரம்..
வாழும் ஒரே தேசிய தமிழன்!

Monday, 16 May 2011

உழைப்பாளர் தினம்.. by Selm Sakthi on Sunday, 01 May 2011


கை விரல்..பத்தும் மூலதனம்

கால்கள்..தேயும் கல்லறை வரை

உழைப்பாளிகள்.. கொண்டாடுகிறார்கள்..

"டாஸ்மாக்கில்" ..கவிழ்ந்துகிடந்து...

கூவி கூவி விற்று..

கை வண்டி பாரம் இழுத்து

கழுத்து வலிக்கும் பாரம் பலபிளாட்பாரம் கடந்து

இடிபடாமல் இந்நரகத்தில் வளைந்துவளைந்து ஓட்டி

போஸ்டர் ஒட்டி..சுத்தம் செய்து

சாயம் தோய்த்து...சட்டைகள் மடித்து

பல ஊசிகள் உடையும் ..

நிறுத்தாமல்..ஓடும் தையலெந்திரம்

வலி..வலி..வலி..

தீர்க்கும்..தீர்த்தம்...

காவிரியில்..இல்லை தண்ணி..

அனைத்து மாநில தண்ணியும் வருகிறது தமிழ் நாட்டிற்கு

காவிரியில் இல்லை.."டாஸ்மாக்கில்"

வற்றாத நதியாய்..வறியவனினுழைப்பை உறிஞ்சி..

கஜானாவில் பெய்யும் மழை..

கவிழ்ந்து கிடைக்கும்..உழைப்பாளிகள்..

வெறுப்பாய் பார்க்கிறேன்.. டாஸ்மாக்கினுள்

பர பரவென பாட்டில் உடைத்து ..தண்ணீர் பாக்கெட் கொடுத்து

சுடும் நெருப்பில்.. தோய்த்து எடுக்கும் நண்டு,மீன் ,எறா, சுறா

பட்டாசாய் டேபிள் துடைக்கும் 15 வயது சிறுவன்

இங்கும்..எங்கும் உழைப்பாளிகள்தான்..

மானியவிலையில் மது வழங்கலாம்தானே!!??


மலர்..கொய்யும் கரங்கள்..


கும்மிருட்டு..

நாய்கள் உலவும் மயானம்

தனிமையாய்..இதை கடக்க தயங்கவில்லை

உனை கடக்கையில்..

உலர்ந்து விடுகிறது நா..

தளர்ந்து விடுகிறது கால்கள்..

இதயத்துடிப்பை தாண்டுகிறது இமைதுடிப்பு..

தயங்கி தயங்கி பார்ப்பேன் சலனமே இல்லை உன்னிடம்!!

ஒரு நாளா.இரு நாளா..

எதிர்வீட்டில் நீ வந்த நாளாய்..

என்னிதயம் உனக்காய் துடிக்க..

வெட்கம் துறந்த மனசு..

உன் வண்டி ஓசையுணர்ந்து..எனை ஜன்னலுக்கு தள்ளும்

ஒரு நொடி கூட திரும்பவில்லை உன் தலை

6 மாதத்தில் மூனு கொலுசு ..

இதை விட அதிகம் சத்தமிடும் மணிகள் இல்லை கடைகளில் ..

நீ வாசல் வரும் நேரம்..பூ பறித்தேன்..

சில மணி நேரம் அதனை தொடுக்கிறேன்..

கை வலிக்க கட்டியது நீ வணங்கும் தெருமுனை பிள்ளையாருக்காய்..

நானாய் வலிய வருதல்..வசதியாயிற்று உனக்கு

என் வாசனையே அறியாதது போல நடிக்கிறாய்..

நீ என் வாசல் வரும் வரை..ஓய்வில்லை

மலர் கொய்யும் கரங்களுக்கு!!