Sunday, 21 November 2010

உதட்டின் வழி...

எங்கு

கற்றாய் பெண்ணே..?

உதடுகள்....

வழி உயிர் உறிஞ்ச!!!

உன் இதயம்..

லப் சொல்ல..

என் இதயம்..

டப் சொல்ல..

இரு இதயமும்..

ஒன்றானது..நாம் ஒருங்கிணைந்த பொழுது!

எனது உள்ளத்தில்

உருவான காதலை

உதடுகள் வழி சொல்வேன்...

உனது உதடுகளை சந்தித்து..!!

உன் அதரத்தை

சுவைத்து..சுவைத்து..

என் உதிரத்தில்

இனிப்பு!!!

என்னை

சுகர் பேஷண்டாக்கு!!!

உன் அதரத்தால்..

என் உதிரத்தை இனிப்பாக்கு!!!


Thursday, 18 November 2010

குழந்தைக்கு ஒரு கடிதம்

இது என் மகன் பிறக்கும் முன் எழுதிய கவிதை கடிதம்!!

எனது இதயத்தை
நிறுத்தி வைத்திருக்கிறேன்...!
உன் பிஞ்சு கால்கள்
உதைத்து இயங்க வைக்கத்தான்!

என் அழுக்குகளை அகற்றி
வைத்திருப்பேன்....
என் மார்போடு உனை அணைப்பதற்காய்!

சோப்புகள் இலாத குளியல்தான்...
உனது பன்னீர் அபிஷேகம்
பெறுவதற்காய்...!

அம்மாவிற்கு மஞ்சளும்..
எனக்கு சந்தனமும்..
வாங்க போவதில்லை..
நீ தருவதற்காய் காத்திருக்கும்
அப்பா!

Saturday, 13 November 2010

NRI அப்பாக்கள்

நட்புகளே..என் மகனுக்காய் நான் எழுதியது..இன்றும் பலருக்கு பொருந்தும்..

என்ன செய்வேன் நான்..??

சபல எண்ணங்கள்---சட்டைக்குள்

பாச உறவுகள்-- பணத்தினுள்

மனம் நாடும் மனைவி-கனவுகளில்

உற்சாக நட்புகள்-- எதிர்கால சிந்தனையில் என

அனைத்தையும் புதைத்து வைத்தேன்....

உன் அழு குரல் செவியுனுள் விழும் வரை!!

நீ உதைக்காத மார்பு..

நனைக்காத சட்டை..

உனை முத்தமிடா எனுதடுகள்..

உன் சிரிப்பை காணா விழிகள்..

என் கனவுகளுக்காய்..

உனக்கு துரோகம் இழைத்தேன்!

உன் நினைவுகள்..

என் கண்ணீராலும் அழிவதில்லை...

நீ பசித்தால் அழுவாய்..

நான் பார்ப்பதற்காய் அழுகிறேன்..

காய்ந்து விடுவது..கண்ணீர் கோடுள்..

அதை காய விடுவதில்லை உன் நினைவுகள்..

கண்ணீர் வற்றும் வரை தொடரும்..

ஆணந்த கண்ணீர்..

ஆரம்பமாகும் உன் அருகில் நான் வரும் போது..

அந்த நாள்.....???

காத்திருக்கும் உன் அப்பா!

(உனை பொருத்தவரை அன்பிலா)


Saturday, 6 November 2010

வலியில்லாத எழுத்துகள்

வறுமை இலாத
வாழ்க்கையால்..
வறண்டு போய் இருக்கும்
என் எழுத்துகள்!!

வறுமையின் வலி
தெரியா என் எழுத்துகள்
வாசமற்ற காகிதபூக்களாய்!!

மனவலியின்
வெளிபாடுகளை எழுத்தாக்கி
வலுவில்லாத எழுத்தாளனாய்
வலம் வருகிறேன்

வழியில்லா காட்டில்
ஒற்றை காலடித்தடத்தை தவறவிட்டு
கால் வலியுடன்
கண்களால் தேடுகிறேன் ஒற்றைத்தடத்தை

வலியிழந்து..
களைப்புடன் கண்ணுற்ற போது..
என் காலடித்தடங்களால்...
பல ஒற்றையடி தடங்கள் வழிகளாய்..

ஒற்றை காலடித் தடத்தை
தேடி- ஒரு நூறு தடம் உருவான
புதிர் வெளிபடும் முன்
ஒற்றையடி வழிகொண்ட காடு மீண்டும்!!!

தெளிவாய்
தடம் தெரிந்தும்..
புதிய தடம் பிறப்பிக்கின்றன
என் காலடித் தடங்கள்

திரும்பிப் பார்க்கிறேன்..
தெளிவில்லாத ஒற்றை காலடி தடம்
என் வலியில்லாத..
எழுத்துகள் போலவே!!