Wednesday, 21 November 2012

அவளொடு நட்பிய நாட்கள்..


ஏனோ...
சுடுகிறது இம்மழை என்றேன்

விலகியிருந்த விரல் கோர்த்து
இனி குளிரும் என்றாய்

சுடாத தீ என்றேன்..
ஈர இதழ் ஒற்றி சுட்டதா என்றாய்

மூச்சு காற்றே இல்லை என்றேன்..
உன் மூச்சை எனதாக்கி சரியா என்றாய்

உறுத்துகின்ற புற்கள் என்றேன்..
மடிதந்து பஞ்சுமெத்தை என்றாய்

முதுகில் பாரமென்றேன்
இறுக்கி கொண்டு இலகியதாயென்றாய்

தொடும் தூரத்தில் இரு நிலவென்றேன்..
வெட்கத்துடனே நீ ஆர்ம்ஸ்ட்ராங்கென்றாய்

விளையாட்டாய் நீ வேண்டாமென்றேன்..
நீயும் அதையே வேண்டுமென்றாய் 

விளையாடதே என்றேன்
விளையாட்டில்லை என்றாய்

மிகு வலி யென உரைத்தேன்..
வேறு வழி இல்லை என்றாய்

வாழ் நாள் துன்பமென்றேன்
சில நாட்கள்தானென்றாய்

கண்ணீர் விடையென்றேன்..
சிரித்த முகம் போதுமென்றாய்

தனியாக பேசிக்கொண்டேயிருக்கிறேன்..

பதிலுரைக்க வருவாயா???

Tuesday, 20 November 2012

சாதீ..சாதீ

சாதிகள் இல்லையடி பாப்பா..
பாரதி பெண்களுக்கு மட்டும் சொன்னதோ??
வேறு சாதிகள் வேண்டாமடா தம்பி
சரியாய் நடக்கிறது சாதி அழிப்பு
சரியாகத்தான் போகிறது ஆண்டவன் கணக்கு
இனி மெல்ல தமிழனமே சாகும்!!!

பொய் முகங்கள்

பொய்களை புணைவது என்பது..
எழுத்தில் மட்டுமல்ல ..
பேச்சில் மட்டுமல்ல
ஏன் வாழ்க்கையே கூட
யாருமற்ற அறையில் கண்ணாடி முன் கூட 
அங்கு முகமுண்டு அகமில்லை
விடியலில் கரையும் இருட்டு..
அலசலில் கரையும் அழுக்கு
ஆனால்
வெளிச்சத்தில் வளரும் நிழலிருட்டு போல 
வளர வளர வளரும் புணைகள்!!

எளிதில் முடிகிறது..
பொய்முகமூடியணிந்து புன்னகைக்க
ஏனோ முடியாமலே போகிறது
பொய் முகத்தை துகிலுறிக்க
அதற்கு முதலில் என்முகமதை அணியவேண்டுமே??

அவள்..அவளாலே

வருடத்தின் ஒரு மழை நாள்
ஒரே மழை நாள்
அனுபவிக்க ஆசையாய்
விட்டு விட்டு சொட்டு சொட்டாய்
இமை மூடி ரசித்த வேளையில்
வெறுப்புற்று .. அறை ஒதுங்கினேன்
எனை நனைத்திட்ட ஒவ்வொரு துளியும்
உன் கரம்பிடித்து நனைந்திட்ட நினைவில் நனைக்கிறது!


நித்திரை தின்று 
நிதம் வளர்கிறது உன் நினைவுகள்
நீர் அணைக்க இயலா தீ போல
நீரே ஊற்றவில்லை.. வளர்கிறது
பாலைவன மரமாய்
எனை கொன்று வளர்கிறது உன் காதல்
போடி.. என் இமைகள் விட்டு
உறங்கிய பின் வந்துவிடுவாய்தானே கனவில்!!!??

பதின் மணிதுளிகள்
கடந்தும் உறக்கம் பிடிக்கவில்லை
உரையாடி கொண்டிருந்தேன்
உரையாடல் வழி.. தாலாட்டினாய்
உறங்கி போனேன்..
மறந்துதான் போகிறேன் 
அங்கு பன்னிரண்டு என்பதினை!!

உன் கனவில் நான் வரப்போவதில்லை
உந்தன் சிறு ஓய்வு 
சிதைக்கப்படும் என் சேவைதனில்

போராட்டம்

ஒவ்வொரு படியும் போராடி ஏறிய பின்..
நன்றியுடன் நோக்குவேன்...
கரம் கொடுத்து தூக்கியவர்களை..
திரும்பி பார்க்கிறேன்..
என் கால்களை கீழ் இழுத்தவர்களை...
அதிக நன்றியுடன்..
என் கால்களுக்கு அதிக வலு தந்தவர்களல்லவா!!!

இரண்டாம் படி விரைவில் ... கிட்டும்

நம்பிக்கை

தினம் தினம்.. துரத்தி வருகிறது
தோல்வியெனும் நிழல்..
சுற்றி சுற்றி வருகிறது
வீழ்த்தி விட
இன்று போய் நாளை வா.. என்றே சொல்கிறேன்
தோல்வியின் பக்கம் நிற்கும் போதும்..

முதல்ல ஜெயிக்கிறது முக்கியமில்ல ..
கடைசியில் ஜெயிக்கனும் ..
நாளை என்ற நம்பிக்கையில்தானே..
தூங்கவே போகிறோம்.!!

இரவு தைரியமாய் உறங்க போகும் ஒவ்வொருவரும்
தன்னம்பிக்கையாளர்களே!!!

நாள் பட்ட காதல்

பழைய நாட் குறிப்பேட்டில்
எழுதியதெல்லாம்...
படித்து கொண்டிருந்தேன்..
ஏனோ ஒவ்வொரு பக்கத்திலும் உன் பெயர்
அதனை தடவி கொடுத்தன என் விரல்களும்
தற்பொழுதைய நாட்குறிப்பேட்டில்..
பல பக்கங்களில் இல்லை .. உன் பெயர்
அவசர அவசரமாய் அங்கே அங்கே எழுதுகிறேன்..
தவறை திருத்தும் மாணவனின் துடிப்பிருந்தது அதனில்
ஆனால் காதல்????????

Wednesday, 14 November 2012

பொய்கள்..

எப்படி இருக்கிறாய்..
நல்லா இருக்கிறேன்...
தினமும் பறிமாறி கொள்கிறோம் பொய்களை
அங்கு நீயும்
இங்கு நானும்
எங்குமில்லை நலம்
முடி துறந்து நான்..
கோதும் உன் விரல்களில்லாது
முடிகள் கூட உதிரும் போது
நா மட்டும் சொல்கிறது..
நான் நலமென்று.