Saturday, 2 March 2013

போடி..போ..

உன் கேசம்.. 
கலைத்த காற்றுக்கு தெரியுமா..
அந்த கலையலில் சிதைகிறது என் மனமென
கரும் மேக கூட்டத்திலிருந்து..
வெளி வரும் ..பளீர் நிலவாய்..
கலைந்த கூந்தல் ஒதுக்கி பிரகசிக்கும் உன் முகம்..
உனை பிரிந்திருக்கும் நேரம்..
அந்த நிலவு சுடுகிறது..
பார்த்திருக்கும் நேரமோ இந்நிலவு சுட
அமாவாசை நாளில் மட்டும்தான் கொஞ்சம் நிம்மதி..
மின்னி மின்னி மறையும் நட்சத்திரங்கள்..
தரையிலிட்ட மீனாய் துடிக்கும் உன் விழிகளாய்
எனை சுட்டு அதனையும் களவாடி போகுது..
போடி...
மரணத்தை விட கொடுமையானது உன் நினைவுகள்
தற்காலிக மரணம் தரும்..
நித்திரையை கொன்று....மிககொடும் அரக்கனாய்
உரு பெற்றுவிட்டது உன் நினைவுகள்!!
போடி..போ..
நீ வேண்டாம்..உன் நினைவு வேண்டாம்..
போடி..போ..

Friday, 1 March 2013

முழு நிலா..

முழுநிலா ஒளியில்..
நீண்ட மணற்கரையில்..
சலசலத்த நீரின் ஒலியில்..
கேசம் கலைத்த காற்றில்..
உள்ளுறுப்பையும் நடுக்கிய வாடையில்..
மிதக்காமல் மிதந்த மேகப்பொழுதில்..
மின்னாமலே மின்னிய நட்சத்திர மாலையில்..
கொல்லாமல் கொன்றுவிட்டாய் ஒற்றை சொல்லில்
சுட்டெழுப்பிய சூரியன் சொல்லியது..உண்மை யென
கை கழுவிய கண்ணகி சிலையை..
கடக்க அஞ்சுகிறேன் இனும்..
எனை மீறி வழியும் கண்ணீரை..
எவரும் அறிவாரோ என எண்ணி..!!

தனிமை

யாருமற்ற தனிமையில்...
உன் நினைவுகளையும்..
உந்தன் வார்த்தைகளையும் அசை போடும் போது
இந்த தூக்கமின்மை நோயும் சுகமாய்!!

சாதீ ஒழிப்பு உறுதி மொழி

அன்பு முக நூல் நண்பர்களுக்கு..
நட்பில் சாதீ பார்ப்பதில்லை..
சாதியை பார்ப்பவர்க்கு நட்பு தேவையில்லை..
சாதி பெயரை இணைத்துள்ள நண்பர்கள்..
எனை அவர்களின் நட்பு வட்டத்திலிருந்து நீக்கி விடும்படி கோருகிறேன்...
சாதீய உணர்வு அதிகமுள்ளவர்களும் எனை விலக்கிவைக்குமாறு வேண்டப்படுகிறார்கள்!
இதனால்..நீங்கள் ஒன்றும் குறையப்போவதுமில்லை..
இந்த சமூகத்தில் பெரிய மாற்றம் நிகழ்ப்போவதுமில்லை என்பதை அறிந்தேயிருக்கிறேன்.
ஆனாலும்.. என் முயற்சியை முன்னெடுக்கிறேன்.
யாருடைய மனமாவது புண்படின் எனது வருத்தங்களையும் பதிவு செய்கிறேன்.