Saturday, 30 August 2014

அம்மா அருந்தகம்...

அவனை
முகத்திலடித்து..
எழுப்பிவிட்டான்..
சூரியன்.

விண்ணென்று ..
தெரித்த தலைதனை
சிலுப்பி சிலுப்பி
ஒருவாறு விழித்தெழுந்தான்

தண்ணீர் துனைகொண்டு
தூக்க மயக்கம் கலைத்து
சட்டைபை துலாவுகையில்
சிக்கவில்லை..சில்லறைகள்.

வெறுத்து போய்
வெற்று கஞ்சிதனை
ஒற்றை வெங்காய துணையோடு
தள்ளினான்..இரு குழந்தைகளோடு

தலைவலியும்..உடல்வலியும்
சோர்வூட்ட..
கஞ்சி குடித்த குழந்தைகள்
கதவுக்கு அப்பால் தள்ள நடந்தான்

ராவைக்கு முன்னாடி..
நாலு காசோட வா..
நல்ல கஞ்சி குடிக்கன்னு
சொன்னா மயிலு.

ஆசையெதுவும் இல்ல
அவ மேல இப்ப
கட்டட வேலைக்கு போய்...
கழுத்தெலும்பு தெரிகையில
காம கண்ணு அக்கம் பக்க வீட்டுமேல

மூத்த பொண்ணு  எட்டாம்ப்பு
சின்னவன்  அஞ்சாம்ப்பு
பாசக்கார பொண்ணு
வாலு பய

ஒத்த வார்த்தையில
சொன்னான்.. இல்ல வேல
தலை சொரிஞ்சி..குழைஞ்சி
வளஞ்சி வசவு வாங்கினான்

100 ரூ பிடிப்பான்..
வழியில்ல பாவம் புள்ளக
மயிலு நோவாய்ல கிடக்க
 நல்ல சோறும்.. மருந்துதான்னான்

கடுப்பல இருந்தான் போல
மேஸ்திரி..முழு நாளும் வெயில
காங்கிரிட் உடைக்க.. உடைக்க
தல உடஞ்ச்சிச்சு அவனுக்கு

பரவாய்ல்ல மதியான சோறு
புள்ளக கூட சாப்ட்ற்றுக்கும்
பள்ளிகூடத்தில... பாவம் மயிலுன்னு
சொல்லி பாதிலயே  எந்திருச்சான்

கை நோக வேல
செஞ்ச காச பிடிச்சுதான் கொடுத்தான்
உள்ளுக்குள்ள கோவம்
நாளைக்கு வேலை வேணும்ல

பஸ் ஏறும் முக்கம்
முட்ட கட பாய் கேட்டாரு
ஏண்டாப்ப சரக்குடலயா
இல்ல பாய் மயிலுக்கு நோவுன்னான்

பாவி  பய பஸ்ஸுக்கு
10 ரூபா.. விடுடா நடைன்னான்
குறுக்கு தெரு சந்து முக்கம் டாஸ்மாக்கு பாரு
வறுத்த மீனு பாத்துபுட்டான்

புள்ளக மூஞ்சி வந்து போச்சு
400 ரூபால 300 அடிபாக்கெட்டுல
100 மட்டும் வச்சிகிட்டு
ஒரு கட்டிங்க் குடிச்சான்

மூளை சுணங்கி
2 குவாட்டரு சொல்லி
மீனை கடிச்சி
440 பில்லுன்னு சொன்னான்

லுங்கிய மாலையா போட்டு
ட்ராயர் பை காசும்
கம்னாட்டி பய கொடுத்துட்டு
உருண்டு உருண்டூ போனான்

ட்ராயருல ஒன்னுக்கு
முட்ட முட்டுசந்து பக்கம்
போஸ்ட்ர்ல் பூரா
முக்கால் வாசி துறந்துட்ட பொட்டைவோ

உச்சி முடி நட்டுகிச்சி
பக்கம் வூட்ட்டு ராசத்தி
முல தரிசனம் அப்படின்னு இப்படின்னு
பொலம்பி போனான்

சிக்கி சிக்கி நடந்தாம்
போதை இப்ப ரண்டாச்சு
சாராய போதை கண்ண மறைக்க
ராசாத்தி போத டிராயர் முட்ட

வெறியேறீ வீங்கிபோனான்
ஒரு மணி கூர்க்கா மூஞ்சில
டார்ச்சடிச்சி போனான்
வெளில பிரண்டு கிடந்தா
வெள்ள தோலு ராசாத்தி

இன்னைக்கு உட மாட்டன்னு
வாய உட்டு சொன்னான்
மூர்க்கமாதான் புடிச்சி புட்டான்
அவ சொன்ன சொல்லு ஏறலய..

சத்தம் கேட்டு மயிலு வந்தா
இழுத்து பாத்தா..தடுத்து பாத்தா
எத்தி உட்டான்.. பாவி மக
பத்தடி தள்ளி உழுந்தா..

இந்த நேரம்..
ராசத்தி உள்ள போய் கதவடைக்க
வெறி கொண்ட பய..
மயில இனும் ரண்டு மிதி மிதிக்காம்

கொஞ்ச நேரம் ஆவல
பாவி பய மூஞ்சு மேல
தண்ணி ஊத்தி.. நாலு தட்டி தட்டி
விலங்கு மாட்டுனான் டாணாகாரன்

பயலுக்கு ஒண்ணும் விளங்கல..
முழிக்காம் அழுறாம்
வூட்டு பக்கம் கூட்டம்
மயில சுத்தி ஒப்பாரி

உண்மையாம் அழறான்
உடமாட்றான் டாணாகாரன்
செயிலுக்கு போற முன்ன
புள்ளகள பாக்கனும்ன்னு அழறான்

அத கேட்டு ..
இன்னும் ரண்டு மிதிக்காம்
டாணாகாரன்
புலம்பி கிடக்காம்..குடிகாரன்

ஒரு பயலும் இவங்கிட்ட பேசல
பாவமா அழறான்..
போதையில அடிச்சன்
நோவுக்காறி போயிட்டாளேன்னு அழறாம்

அந்த மேஸ்திரி பயதாம்
கிட்ட வந்தான்..இந்த பய சொன்னான்
அண்ணன் ..நீ பிடிச்ச 100 ரூபாய புள்ளககிட்ட கொடு
ஏதாவது சோறு திங்கும்ன்னு அழறான்

அட பாவி குடிகாரா
உன் புள்ளய தாண்டா கட்டிபிடிச்ச
தடுத்தவள சங்கில மிதிச்ச கொன்னுட்டிய
நாய் சென்மம்டான்னு திட்ட

விஷயம் புரிஞ்சிடுச்சி..
விஷம் சாப்பிட்ட கணக்காம் துடிச்சான்
மூஞ்சிலடிச்சு அழுதான்..
முட்டி முட்டி ரத்தம் வர அழுதான்

இனி அவன் குடிக்க மாட்டான்
செயிலுக்குள்ள டாஸ்மாக் வராதுல்ல?????


 இது..அதீத கற்பணையன்று.. அங்கொன்று இங்கொன்றாய்  நடக்கும் பாவமே...

3 வயது ஆண்  குழந்தைகள் தேனி மாவட்டத்தில் ஆற்றில் அடித்து செல்லபடவில்லை
வன்புணர்வில் கொல்லபட்டிருக்கிறார்கள். கொலையாளி கண்டிப்பாய் மது நோயாளியாய் இருப்பான்.
வாழ்க தமிழகம்..தமிழினம்!!!

புலம்பல்...

புன்னகைக்கு பின்..புகைகிற மனமிருத்தலை
கண்டு..கண்டு சோர்வுற்றுள்ளேன்
ஒரு வகையில் நானும் அவர்களை போல்
பொய்யாய் சிரித்து.. பேசுவதால்
என் உணவை யாரும் திருடவில்லை..
என்று இறுமாந்திருக்கிறேனா??? ஏமாந்து இருக்கிறேனா???
பொறாமை தீ...
கொண்டவனையே... மூச்சிடைய வைக்கிறது
ஏறிகொண்டுதான் இருக்கிறேன்..
உயரம் வரவேயில்லை..
சறுக்க வைத்த மனதுகளுக்கு நன்றி!?
எதிரில் இருப்பவர் எல்லாம் எதிரிகளா..?
இல்லை..
எதிர்ப்பவர்கள்..எல்லாம் எதிரிகளா???
குழப்பத்திலே.. உலகம்!!???
எனக்கு..பிடிக்காத மனிதர்கள் பலருண்டு...
ஆனால்
எதிரியென்று எவருமிலை..
என்னை.. "நான்" தின்று விழுங்கும் போது
எதிரியென்று சொல்ல எவருமில்லை..!!
என் தோல்விகள் அனைத்தும் வெற்றிகள்தான்..
சிலர் அதை முயலாமல் இருப்பதாலே!!
பலரின் வெற்றிகள்.. என் தோல்விகளே
நான் அதை முயலாமல் இருப்பதாலே
இங்கு வெற்றியாளன் என்று எவருமில்லை..
தோற்று போனவனும் யாருமில்லை???
இரவில் உறங்கி... விழிப்பதே
உறக்கத்தை வெல்வதே..
காலம் ஒரு காட்டாறு..
நீர் வரும் போது வேகம்..
இல்லையெனில் வற்றல்
வற்றி வற்றி வாழ்வதுதான் மனித விதி..
இதில் மனிதம் மறப்பதா நியதி??
மனமே..
காட்டாற்றில் நீர் வரும் ...
உன் வியர்வை வெற்றி தரும்!!

அப்பாகள்..

எழுத தொடங்கிய.....
பின் தான் .... தேட தொடங்குகிறேன் வார்த்தைகளை
ஏமாந்த பின்னே
விழித்து கொள்ளும் அப்பாவிகள் போல..
அப்பாக்கள்....
ஒன்று அப்பா விகள்...!
இல்லை அப்பா கல்...!
சில சமயம் அடபாவிகள்...!
ஆமாம்... அப்பாக்கள்.... பாவம்ப்பா!!!

அழிதல்..சுகம்

விதைகள் வீழ்ந்த பின்னே..
விருச்சம் வரும்..
இருளின் பின்னே வெளிச்சம் வரும்..
மேகமழிந்தால் மழை வரும்..
அழிதலுக்கு பின்னே ஆக்கம் வரும்..
காத்திருக்கிறேன்..
"நான்" அழிய...???!!

கசங்கிய தாள்கள்

எழுதி முடிக்கும் முன்னே...
எழுத்து பிழைகளால்..
கிழித்து போட்ட காகிதங்களில்..
கவனிப்பின்றி கிடக்கிறது..
அபார்ஷனான அரைகுறை கவிதை கருக்கள்!!

இப்படிதான்..
கசக்கிய பல தாள்கள்..
குப்பைக்கு போகாமல்..இழுப்பறைக்குள்ளே..?
அதில் அவள் பெயர் எழுதிய காரணத்தால்!.

வரும்--வரம்

நிச்சயிக்கபட்ட அந்த நாள்..
வந்தே தீரும்..
இடையில்.. முழுதும்
துன்பமான வாழ்க்கையில்..
அவபொது வந்து போகும் சிற்சில இன்பம்..
அனுபவித்து வாழ...

மனம்..தூக்கம்

தடுமாற்றமாகதான் இருக்கிறது
இந்த மன மாற்றம்..
நிலை அறியா மதில்மேல் பூனையாய்
சிந்தித்து தெளிந்த விடயங்கள்
விடமாய்...மீண்டும் மீண்டும் தீண்ட
சிந்தனைக்கு.. இட வேண்டும் சிறை
எண்ண ஓட்டங்களாய்,,
தூக்க கனவுகளாய்..ஓய்வேஎடுக்கா சிந்தனைகள்
தூக்கம் கொல்லும் கனைகள்!


எதையோ..மீதம் வைத்தே
முடிகிறது இந்த நாட்கள்....
மறு நாளும்.. நம்மை இயங்க வைக்க
மனக்கருத்தை.. முழுதும் திறக்காமலே
முடிந்து விடுகிற இந்த கவிதைகளும்
நாளை.. என்று எதிர் நோக்கி

ஆச்சரியமாய் இருக்கிறது..
நாளை என்ன இருக்கிறது...
என்று சிந்திக்காமல் இன்று உறங்குபவரை..
அது கிட்டுமா... அதுதான் முழு அமைதி!!

அவளிடம்...

காய்ந்து பட்ட பூக்கள் ...
காணும் போதெல்லாம் ..
கண்ணுக்குள் வரும் உன் கண்ணீர் முகம்
நாட்கள் பல கடந்த பின்னும்
அன்று காயப்படுத்திய என் விரல்களை
இன்றும் தண்டிக்கிறேன் ....
மனமாற வில்லை...
மனம் ஆற வில்லையடி !!



ஒரு கோராத..மன்னிப்புண்டு

மரணப்படுக்கையில்..
உன் மடியில்
கேட்க வேண்டுமதை..?!

என் வழியும்..
கண்ணீர் துடைத்து..
புன்னகைத்து தலை அசைப்பாய்..

அந்த புன்னகைத்த..
நொடியில் பிரியும் என்னுயிர்

அந்த நொடிக்காகவே..
கோராத மன்னிப்புண்டு என்னிடம்!!

Tuesday, 6 May 2014

காதலானவள்...

உனை சந்தித்த நாளில்..
உள்ளங்கையில் முளைத்ததடி
ஒரு புது ரேகை..

விரலில் தொடங்கி
இதயம் நுழைந்ததந்த
காதல் ரேகை

அந்த ரேகைக்கு
அடிமைபட்டு போனதடி..
என் ஆயுள்  ரேகையும்!

ஆளில்லா தேசத்திலும்..
அம்மா மடியடி
உன் காதல்!!

பாலைவன மணலிலும்
நிழல் தரும் தருவடி
உன் காதல்!!

மயிலிறகும்..
மாசுபட்டு நிற்குதடி..
உன் விரல் வருடல் முன்!!

புது மலர்கள் அத்துனையும்..
மணக்காமலே போகுதடி..
உன் கூந்தல் வாசத்தில்!!

இளையராஜா கூட..
தோற்றுபோனதென்ன..
எனக்கேஆன உன் தாலாட்டில்!!

உனை நினைக்கும் போதெல்லாம்
மணக்கிறாய்...
இனிக்கிறாய்..
யாரடி நீ!!??

நீ...
எனக்காய் விழிக்கும் சூரியனாய்...
எனை துயில வைக்கும் நிலவாய்..
எனக்காய் மட்டும் வீசும் தென்றலாய்...
என் தோட்டத்தில் பெய்த மழையாய்..
எல்லாமும் எனக்காய்!!!

உன் கரங்களில்...
உள்ள பொழுது..
மரணம் கொன்ற மன்மதனாய்..
உன் மடியில்..
உள்ள போதோ..
தாயின் கருவறை சிசுவாய்!!

என்...
நேசித்தலும்..
யாசித்தலும்...
சுவாசித்தலும்..
நீயாய்!!
உனக்கான..உலகத்தில்...
நானும்....
எனக்கான...
உலகமே....   நீயாய்!!!