வருடங்கள்..
பல கடந்து சொந்த கிராமம் செல்வது
சுகமாய்தான் இருந்தது!
20 கி.மீ தாண்டாத
மேடு பள்ளம் பயணம் கூட
இனிக்க தொடங்கியிருந்தது..!!??
முன் இருக்கை அழகு மயிலை கண்ட பின்னே..
மாமா பெண் கல்யாணம்
வந்ததுதான்டா ஆகனும்
"அம்மா கட்டளை"..!!
விருப்பமேயில்லாது
கிளம்பினேன்..
கிராமத்தை அடையும்..கடைசி கட்ட 'குலுக்கு பயணம்'
முடிவதில்..இப்போது விருப்பமேயில்லை!!
கிராமத்துக்கு பொருந்தா உடை..
அனைவரும் எனையே பார்த்தாலும்..
அவள் பார்வைகள்தான்..
எனை பந்தாடியது..பேருந்து ஆட்டம் போலே!
தாய்மொழி சிறப்பை உணர்ந்தேன்..
பிறகென்ன..அக்கறையே இல்லாமல்
படித்த போதும்..அவளை வருணிக்க வடிக்க
வார்த்தைகளை அள்ளி தருகிறதே!!
முப்பது நிமிட பயணத்திற்குள்..
முப்பதேழுமுறை..
முன்னிருக்கையின் கண்
என்னிருக்கை மீது..
கல்யாணம் செய்ய சொல்லும்
அம்மாவிடம் சொன்னால்..
கையோடு பேசி முடித்து ..
அனுப்பி வைப்பால் என்னோடு ..எவ்வளவு ஆசை!!!
பேருந்து நின்றது..இதயமும்..
துடிக்க வைத்தாள் சிறு புன்னகையாலே
சிறு கிராமம்தான்..கிட்டிவிடுவாள்
எனும் நம்பிக்கையால் நிற்காமல் துடித்தது!!
தயங்கினேன் பேச..
அவளும் தயங்கினாள்..பேசுவேன் என எண்ணி
தந்தியடித்த வார்த்தைகளால்..
தள்ளி போனேன்..போனாள்..
கல்லூரியில் தொடங்கி
கல்யாணம் வரை..7ல் ஏமாந்து
8ஐ கைபிடித்த காதல் குருவுக்கு
தொலை பேசினேன்..நட்பின்றி அசையாதே காதல் படகு!!
கர்ண கொடுராமாய்..
சிரித்தான்..முதல் பார்வையிலே காதல்...
நீ என்ன விடலையா..?
கல்லூரி பருவமல்ல..இது கல்யாண வயது..
காசு செலவு செய்து..காதுக்கு இரத்தம் (காதலுக்கும்)!
அவனிடம் சொன்னேன்..
ஒரு முறையே பூக்கும்..வாழை மரம் என் மனம் என
சிற்சில ஆலோசனையுடன் வாழ்த்தினான்!!
மெதுவாய்..
அவளை தேடும் அலை பாயும் கண்களுடன்
சுற்றி சுற்றி வீடையடைந்தேன்....
வாங்க அண்ணா....
என்னை உங்களுக்கு மறந்து போச்சா..
பஸ்லியே பேசுவிங்கன்னு பார்த்தேன்..
எங்க போனிங்க..இவளவு நேரம்
ஒரு வார்த்தை பேசுவாளா..என ஏங்கிய மனது
கேட்க மறுத்தது..தங்கையின் வார்த்தைகளை
உங்களுக்கும் கேட்டிருக்கும்..என் இதய வெடிச்சத்தம்!!!
அம்மா கேட்டாள்..
என்னடா இது கோமாளி போலே உடை என்று!!
உண்மைதானே..
ஆமாம் ...
சில நேரம்..வாழைமரங்கள் இரண்டாவது முறை பூக்கும்தானே!!??