Monday, 10 September 2012

தளரா மனம்...

வழி தவறும் பறவைகளின்...
இறக்கைகள் வலுவனாதாய் மாறி போகிறது!!
தனிமைப்பட்டு போகும்.. களிறு..
மூர்க்கமாய் மாறி போகும்!!
அடிப்பட்ட நாகம்..அதிகமாய் சீறும்!!
மாதா மடிபிரிந்த மந்திகள்
மனமுடைந்து மாய்வதில்லை..!!

அறிவால் உயர்ந்த மனிதா..
தோல்வியில் ஏன் துவண்டு போகிறாய்???
தடைகள்தான்.. தளரா மனம் தரும்...
துயரம்தான்.. நெஞ்சுரம் தரும்...
தோல்விகள்தான் வெற்றி வேட்கையளிக்கும்

வெற்றிக்கான விடியல் நாளையே கூட இருக்கலாம்!!!

No comments:

Post a Comment