பாறை துளைத்திடும் வேர்கள்..
பாவையவளின் கண்கள்..
பறவையின் எச்சமது..
பல பாறை துளைத்து செடியாகும்
கவனமேயில்லாமல்..நீ
பார்த்த கருணை பார்வைதானடி காதல் செடியாய்
இறுக்கமாய்..இறுகி
பாறை யென வலம் வந்தேன்
சின்னதொரு தட்டலில்..
வெளி வ்ந்ததிந்த காதல்.. தேரைஒளிந்த பாறையாய்
பாறை சிறை மீண்ட தேரையாய்
அலைகிறது கண்ட படி உனை காணும்படி
கட்டுபாடு இழந்து.. சுய கர்வமழிந்து
உன்னுருவம் தேடும் அடிமை விழிகள்
கசந்திட்ட இகழ்ந்திட்ட காதல் கவிதைகளை
தேடி தேடி படிக்கிறது..பிடிக்கவும் செய்கிறது இன்று
பாறை இடுக்கு செடி..
அதனை ஆழப்பிளந்து மரமாய் இன்று
பிறை நெற்றி பொட்டு..
இட்டுவிட துடிக்கும் விரல்கள்
வில்லாக புருவம்..
அம்பாய் விழிகள்..காயப்பட காத்திருக்கும் மனது
அழகிய சர்ப்ப உதடுகள்
தீண்டும் நாக்குகள்.. செத்துவிட தயாராய் நான்
சங்கை நினைக்கவில்லை ..
மஞ்சள் நாண் தேவைப்பட்டது.. உன் கழுத்திற்கு
வளை கரங்களை வளைக்கும் நாளை
பாத கொலுசை பறித்துவைக்கும் நாளை
தேடி தேடி ஓடும் மனமதை ..
பாறையென சொல்லி ஏமாந்திருந்தேன்
உளி தாங்கும் பாறைகள் சிலையாகும்
நானோ தேரையோடிய பாறை..
உளி தாங்க மாட்டேன்..
என்னில் சிலைகள் வேண்டாம்..
நீ துளைத்து வளர்த்திட்ட செடி போதும்
தண்ணீர் தராது போ..
ஆனால் வெந்நீர் ஊற்றாதே
விடிந்ததும் .. மறைந்திடும்
பனிதுளி போல மறைந்து போனாய்
உன் பார்வைகள் அனைத்தும்...
பாறை துளைக்கும் வேர்களாய் என்றுமே!!
பாவையவளின் கண்கள்..
பறவையின் எச்சமது..
பல பாறை துளைத்து செடியாகும்
கவனமேயில்லாமல்..நீ
பார்த்த கருணை பார்வைதானடி காதல் செடியாய்
இறுக்கமாய்..இறுகி
பாறை யென வலம் வந்தேன்
சின்னதொரு தட்டலில்..
வெளி வ்ந்ததிந்த காதல்.. தேரைஒளிந்த பாறையாய்
பாறை சிறை மீண்ட தேரையாய்
அலைகிறது கண்ட படி உனை காணும்படி
கட்டுபாடு இழந்து.. சுய கர்வமழிந்து
உன்னுருவம் தேடும் அடிமை விழிகள்
கசந்திட்ட இகழ்ந்திட்ட காதல் கவிதைகளை
தேடி தேடி படிக்கிறது..பிடிக்கவும் செய்கிறது இன்று
பாறை இடுக்கு செடி..
அதனை ஆழப்பிளந்து மரமாய் இன்று
பிறை நெற்றி பொட்டு..
இட்டுவிட துடிக்கும் விரல்கள்
வில்லாக புருவம்..
அம்பாய் விழிகள்..காயப்பட காத்திருக்கும் மனது
அழகிய சர்ப்ப உதடுகள்
தீண்டும் நாக்குகள்.. செத்துவிட தயாராய் நான்
சங்கை நினைக்கவில்லை ..
மஞ்சள் நாண் தேவைப்பட்டது.. உன் கழுத்திற்கு
வளை கரங்களை வளைக்கும் நாளை
பாத கொலுசை பறித்துவைக்கும் நாளை
தேடி தேடி ஓடும் மனமதை ..
பாறையென சொல்லி ஏமாந்திருந்தேன்
உளி தாங்கும் பாறைகள் சிலையாகும்
நானோ தேரையோடிய பாறை..
உளி தாங்க மாட்டேன்..
என்னில் சிலைகள் வேண்டாம்..
நீ துளைத்து வளர்த்திட்ட செடி போதும்
தண்ணீர் தராது போ..
ஆனால் வெந்நீர் ஊற்றாதே
விடிந்ததும் .. மறைந்திடும்
பனிதுளி போல மறைந்து போனாய்
உன் பார்வைகள் அனைத்தும்...
பாறை துளைக்கும் வேர்களாய் என்றுமே!!
superb
ReplyDelete