FB STATUS..கிறுக்கல்கள்
நீ இலாத நாட்களிலும்..வீட்டில் துயின்றுள்ளேன்..
அன்றெல்லாம்..அறைகள் சேமித்த உன் கொலுசொலி
எனை கொஞ்சி..கொஞ்சி தூங்க வைத்தன..
இங்கும் நீ ..சில நாள் தங்கிபோகத்தான் வேண்டும்...
அதுவரை உறங்கா விழிகளோடுதான் நான்!!
தெரிந்துதான்..பிரிந்தேன்..
மன வலிமை..உண்டென நினைத்தேன்..
மன வலி..மட்டும்தான் மீதமிருக்கிறது!!!
வான் மழை ஓய்ந்தபின்னும்..
நீர் நிற்க வில்லை.. கண்ணீர் நிற்கவில்லை
கண் விரிய பார்த்த விமானம்..இன்று
கடக்கையில்-காதுகளை மூடுகிறாள்..
அவள் என்னுடன் வர மறுக்கும் முதல் பயணம்..
விடை தரும் பயணம்.. ! காலம் கனியும் ...
கனியவள் புன்னகை கண் முன் வரும்..!
காவி கட்டிய கழைகூத்தாடி..
அப்படிதான் தோன்றியது..ராம்தேவின் கானொளி கண்ட போது!!
வரவா..வேண்டமா...
கேட்டுக்கொண்டே இருக்கிறது மழை!
வரவா.. வேண்டாமா..
என கேட்காமலே..மனதுள் மழைபெய்கிறது உன் நினைவுகள்!!
No comments:
Post a Comment