ஆர்பாட்டமில்லா அரபு கடற்கரை..
கால் வைத்தவுடன்..கரம் கோர்த்து நடந்த ஞாபகம்!
விழித்தெழும் நேரம் உன் முகம் தேடும்.. மனம்
வெற்று அறை..
நீ சொல்லாமல் .. நான் புகும் குளியலறை
நானே எடுத்து செல்லும் துண்டும்..
இரு முறை இட்டும் மணக்காத சோப்பும்..
வழமை போல் அரையீர தலை..வைய நீ இல்லை!
ஒரு கை எண்ணை..
எனக்கும் நம் மகனுக்கும்
நீ என்ன சின்னபுள்ளையா..அவன் கேலி செய்ய
ஆமாங்கிறேன் என சொல்லி சொல்லி ஊட்டும் விரல்கள்
அவப்போது வரும் ஊடலும்.. பெரும் ஊடலும்
7 வருடம் முடிந்தது என்பதை நம்ப மறுக்கும்- இவனில்லையேல்
பணிமுடியும் நேரம் தெரிந்திருந்தும்..
சிலமுறை தொல்லைபேசி.. வரும் நேரம் கேட்பாய்..
வண்ண விளொக்கொளியும்..நிரப்பாத வீட்டில் நான்
விரல் மீறி வந்த நகம் சொல்லுது.. நீ இல்லை என
எனை மீறி சொடுக்கு எடுக்கையில்.. சத்தம் சொல்லும்
இந்த வேலையும் உனதானதடா என..
இரு தினம் ஒரே ஆடை..தடுப்பதற்கு இல்லை நீ..
தடுமாறிதான் போகிறேன்..இத்துனை சோம்பேறீயா நான்
தனிமை நொறுக்க...வெளி போகிறேன்
தவித்து போகிறேன்..அங்குமிங்கும் நீ .. நினைவுகள்
புல் வெளியில் கால் தொட..
மடி மீது தலைவைத்து..நீண்டு கண்ணயருகையில்..
காது கூச வைக்கும் புல்..நினைவுகள் தொடுகிறது
இன்னிசையை காது முழுதும் நிரப்புகிறேன்..
தனியாய் கேட்கிறது..எப்பொழுதோ நீ "ஹம்மியது"
விரட்டி விரட்டி சுடுகிறது நீ எனும் தீ..
கடுகளவுமில்லை காமத்தீ..
கவிதைகளுக்காய் தந்திட்ட காதலா நீ..
காதலால் கசிந்திட்ட கவிதையா நீ..
உனை சொல்ல கவிதையுண்டு..
முழுவதும் உரைத்திட்ட காதலில்லை..
இதுவும் முற்று பெறா கவிதையே!
hello sir
ReplyDeletei am baskar. how r u? s ungaloda kavithai super
plz send ur mail id
sssmannai@yahoo.in
ReplyDelete