சொர்கம் தேடி..தேடி கடவுளை சேர்ந்தேன்..
மண்ணில் கொஞ்சம்... தந்தால் என்ன என்றேன்..?
சிரித்தார்.. வா என்னுடன் என்று புவியில் சிலரை சுட்டினார்..
பால் மணம் மாறா குழந்தை சிரிக்க - தாய் தந்தை இப்போது சொர்கம்
தாய் மடியில் துயிலும் ..சேய்க்கு சொர்கம்..
கொளுத்தும் வெயில்.. காதலி மடியில் -சொர்கமடா..
பெரும் தோல்வி.. ஆறுதலாய் மனைவிமடி -சொர்கம்
60 ஐ தாண்டி.. அரவனைப்பாய் பிள்ளை..- மடி விளையாடும் பேரப்பிள்ளைகள்-- இறக்கும் முன் சொர்கம்..
எதிர்பார்பன்றீ கூடவே வரும் நட்பும் சொர்கம்..
இவையெல்லாம் படைத்திட்ட நானே ஏங்கும் சொர்கம்..என்றான்!
மனித பிறவி வேண்டா வரம் கேட்காமல்..மீண்டும் பிறப்பெடுக்க ஆசியுற்றேன்
இந்த நொடி..இனிய நொடி
மண்ணில் சொர்கம் அமைப்போம் !
No comments:
Post a Comment