புத்தாண்டு..
புதிதாய் என்ன தருவாய்..?
இருப்பதை இழக்காமல் இருப்போமா??
கூடங்குளம்..
ஆபத்தில்லாமல் அமையுமா?
பிரச்சினை இலாத பெரியாறு தண்ணி கிட்டுமா?
கண்காணிப்பில்லா சுதந்திரம் அடைவானா ஈழதமிழன்?
உண்மையான சமச்சீர் கல்வி தொடங்குமா?
இருக்கின்ற மருத்துவமனைகள் முதலில் சீர்படுமா?
சாலை வழிதடம் சரிபடுமா?
விபத்திலா விமான பயணங்கள் அமைந்திடுமா?
உரிமை கேட்கும் ஒவ்வொரு மனிதனும் கடமை புரிவானா??
தானே வோடு போகட்டும் இவ்வருடம்..
நல்லதை தந்திடு .. புத்தாண்டே நன்மையை தந்திடு
வருக வருக 2012ம் ஆண்டே வருக வருக!!
No comments:
Post a Comment