மரணத்தில் சுகம்..
அவள் மடி சுகம் தரும்..
நிதம் மரணம் தேடும்.. மனம்!
ஓய்வின்றி உழைக்கும்..மனம்
நேரம் பார்க்க மறுக்கும் விசுவாசஅடிமை குணம்
உறக்கம் தரும் ஓய்வும் கனவுகள் களவாடி போகும்
காலணி கழற்றிவிடுவதோடு..
கடமை சுமையை கழற்ற முடிவதேயில்லை
நீ அருகிலிருக்கும் நேரம்..
அழைப்பு பொத்தான் அழுத்தும் நேரமே
கண் கட்டும் சோர்வை
கதவை திறந்து கட்டியணைத்து
களைப்பை ஆடையை அகற்றி
காதல் மொழி கண் பேச
கை சுடும் தேனீரும்
மீட்டெடுக்கும் எனை
சிறப்பு வகுப்பு சிறை சாலைதாம் வீடுகள் பெண்களுக்கு
சிரிப்போடு வலைய வ்ரும் ஸ்ரீதேவிகள் எல்லாம் ஆயுள் கைதிகளே
அக்கம் பக்கம் பேச்சு சுகமும் இங்கில்லை
தொலைகாட்சி சுகமும் நீ விரும்புவதில்லை
விருப்பமிருந்தாலும் விடப்போவதில்லை நம் வாலு
சிரிப்போடேஇருந்தாய் சிறப்பாய் சில நேரம் செருப்பாய்
திறக்க நீ இலை தெரிந்தும்
அழைப்புமணி அலுத்தும் விரல்கள்
தேனீர் வாசம் மறந்துவிட்ட சமையலறை
நட்பு வட்டம் சூழும் வார இறுதி
வெறுமை மட்டும் சுமக்கும் மனம்
காதல் திருமணம் என்று சொல்லி வந்தேன் அர்த்தேமேயில்லாமல்
உண்மையான காதலை இப்பொழுதுதானே சொல்ல தொடங்குகிறேன்
வார்த்தைகளால் இல்லை.. கண்களால் அது உகுக்கும் கண்ணீர் துளியினால்
கண்ணோரம் கசிந்திட்ட ஒரு துளிதான் உணர்த்தியது
காதல் எதுவென்று!!??
உறங்க வேண்டும் ..
உண்மையாய்
ஒன்று உன் மடி வேண்டும் இல்லையேல்
மரணம் வேண்டும்!!!
No comments:
Post a Comment