Monday, 16 April 2012

பண..மனிதர்கள்..


குருதி கறையுடன்...
குற்ற உணர்ச்சி இல்லாமல் ... வலம் வருகிறது பணம்!!!
பணத்தாசை மனிதர்கள்..
குருதி வடியும் கோர பற்களுடனே.. வலம் வருகிறார்கள்
பசப்பு வார்த்தைகளும் கள்ள சிரிப்புமாய்..
துரோகங்கள் பணம் கட்டும் கயிறுகளாய்.. மாறி போன பின்
துரோணாச்சிரியர் வேடமிடும் கயவ கூட்டம்
உழுது அறுத்த பின் பதறாமல்.....
பதர்தனை கூலியாய் தரும் குள்ள நரிகள்
தாமதப்படுத்திய நீதியும்.. கூலியும் ஒன்றுதான் என்பதை
உணரமறுக்கும் உத்தமர்கள் வருகிறார்கள்..
இரத்தம் தோய்ந்த புன்னகையுடன்.. கரம் குலுக்க
காத்திருக்கிறேன் கரம் குலுக்க வெட்கத்துடனும் வேதனையுடனும்!!

1 comment:

  1. துரோகங்கள் பணம் கட்டும் கயிறுகளாய்.. மாறி போன பின்
    துரோணாச்சிரியர் வேடமிடும் கயவ கூட்டம்
    உழுது அறுத்த பின் பதறாமல்.....
    super by baskar

    ReplyDelete