Thursday, 20 December 2012

"அன்னை தமிழின் இன்றைய நிலை! "எழுத்தோலை கவிதை திருவிழா"- படைப்பு 1.


"
அன்னை தமிழின் இன்றைய நிலை!
"எழுத்தோலை கவிதை திருவிழா"- படைப்பு 1.
---- ------- ------
தாயே தடுப்பினும்- விடேன் தமிழை பழித்தவனை
தாயே பழித்தால்.. என் செய்ய

அம்மா என்றழைப்பை- விரும்பாத அம்மாக்கள்
ஆடு மாடுகளுக்கும் - ஆங்கிலம் கற்று தரும் கயமை கூட்டம்

டமில்..டமில் என்று எம் தமிழுக்கு டுமீல்
தொட்டிலிலும் சரி..
கட்டிலிலும் சரி.. தொடா தூரத்தில் தமிழ்

சாதிகள் ஒழிய..கலப்பு மணம்
தமிழ் அழியவா.. மொழிகளவுமணம்

இருபதாயிரம் வருடம் கடந்துவிட்ட களைப்போ.??
முதலில் தோன்றியதால்.. வந்திந்த முதுமையோ??

தமிழ் வாழ்க என்று சொல்லி சொல்லி
ஆங்கில பள்ளிகள் நடத்தும் கோமகன்கள்

தமிழில் பேசதடையிடும்..
தமிழாசிரியர்-தந்தையாக??!!!

ஆயிரம் கைகள் மறைப்பினும்..ஆதவன் மறைவதில்லை
ஆங்கிலம் கலப்பதால் எம்தமிழ் மரிப்பதில்லை!!

இளமை வேகத்திற்கு கொஞ்சம் தடுமாறும் தமிழ்
இளமை உணர்விற்கு கொஞ்சமும் தளரா திமிழல்லவா

கன்னியவளின் கடைகண்களின் கன்னியில் சிக்கிய
காளையர்களின் கைகொடுக்கும் தெய்வம் கன்னிதமிழே!

இவ்வுலகம் மரணிக்கும் வரை..காதல் வாழும்
காதல் வாழும்வரை.. கன்னிதமிழம் வாழும்

இன்றைய தமிழக தேவை...
மின் மட்டுமல்ல...
இன்தமிழும் கூடத்தான்..

கூடி உரைப்போம்..சூடி மகிழ்வோம்
தமிழை..தாய் தமிழை

மன்னை செந்தில் .
"

No comments:

Post a Comment