Thursday, 20 December 2012

"தமிழ் வழி கல்வி (எழுத்தோலை கவிதை திருவிழா)-படைப்பு-2


"
தமிழ் வழி கல்வி
(எழுத்தோலை கவிதை திருவிழா)-படைப்பு-2
------ ------- ------ ---- ------ ------ -----
தத்தி தடுமாறி நடக்கும் மழலைகளும்....
மம்மி டாடி என்றே அழைக்கும்
அதனாலோ தடுமாறும் தாய்மொழி கல்வி?

தமிழ்வழி கல்வியில்தான் படித்தேன்
தமிழில் கவிதை பல வடித்தேன்...
ஆனாலும் என் பிள்ளை...??
சுய நல தமிழர்களால் சறுக்கும் தமிழ்வழி கல்வி

மற்ற மொழிகள் ஆடையணியா காட்டுமிராண்டியாய்..
எம் தமிழோ ஐந்து பன்னிசைக்கும் இலக்கியாருவியாய்
மற்றவை..கால்நடையாய் நடக்கும் போதில்..
திருக்குறள் தேரில் சென்றது எம் தமிழ்

அறிவியலை அணைப்பதில்..
பொறியியலை புரியவைப்பதில்..
அணுவியல்..ஆற்றலியல்..மின்னறிவியலில்...
தொடர்புசாதன கல்வியில்..தொடர்பில்லாமலே
சிறிது தடுமாறுகிறது.. எம் தாய் மொழிக்கல்வி!

தமிழ் ஆங்கில களவியலால் வந்ததிந்த..வழுக்கல்

ஒரு வரி ஆங்கிலம் அறியததாலேதான்..
அமெரிக்காவிற்கு போட்டியாய்..சீனா

அமெரிக்கா போவதுதான்..உச்சமாய்
அதுதான் லட்சியமாய் .. நம் கல்வியின் நிலை
அதனால் அடங்கிபோகிறது தாய்மொழி தமிழ் கல்வி!

புரிகிறதோ இல்லையோ..
பொதுமொழியாயிற்று ஆங்கிலம்..
அதில் புகுந்து வாழ்வதே..பிழைப்பாயிற்று

இலவச கல்வியில் மட்டும் தமிழென்பதால்..

தமிழ் வழி கல்வி என்பது..
வருமையின் வெளிபாடாம்..
ஆங்கில கல்வி என்பது..
அடிப்படையாயிற்றாம்!

ஆங்கில கல்வி அவசியமாயிற்று
மற்ற மொழி கற்றல் அட்வாண்டேஜ் ஆயிற்று
தமிழ் வழி கற்கும் குழந்தையெல்லம்..தொழிலாளியாயிற்றே!

ஆங்கிலப்பள்ளியில் படிக்கும்..
அருமை மகன் படிக்கிறான்..
பாரதியின் வரிகளை...
"இனி தமிழ் மெல்ல சாகும்"

மன்னை செந்தில்..

No comments:

Post a Comment