Thursday, 20 December 2012

"குழந்தை தொழிலாளர் முறை (எழுத்தோலை கவிதை திருவிழா)- படைப்பு-3


"
குழந்தை தொழிலாளர் முறை
(எழுத்தோலை கவிதை திருவிழா)- படைப்பு-3
------ ----- ------ ----- ----
இனியும் பல்லாண்டு வேண்டும்..
இந்தியா வல்லரசாய் மாற???
ஒரு குழந்தையும் தொழில் சுமக்கா நாள்தான்
அத்திரு நாள்..என்று வருமோ?

படித்தால்..புத்தக மூட்டை..
படிக்காவிட்டால்..ஏதோ ஒரு மூட்டை
புத்தகசுமையை விட அச்சுமை எளிதாயிற்றோ?

ஒரு குழந்தை வரம் வேண்டி.... - கோடி பேர் தவிக்க
பல குழந்தை சாபம் பெற்ற --- பல பேர் பரிதவிக்க
வறுமைக்கும்.. வளமைக்குமான போட்டி
“இடையில்..பெரும் பள்ளம்”
நிரப்ப வேண்டி சுமக்கும் சுமையா??

அரைசாண் வயிற்று பள்ளம் நிரப்ப..
ஓடிகொண்டேயிருக்கிறது ஒரு கூட்டம்..
அதன் முற்றத்தில் விளைந்த....
குருத்தெல்லாம்—பயிறாகும் முன்னே கருகுவதோ??

இலவச உணவிட்டும்..
சீருடை முதல் செருப்பு வரை தந்தும்
சிறகை ஒடித்துகொண்டு... சுமை சுமக்கும் சிறார் கூட்டம்
காசின் மீது காதலா? கல்வியின் மீது வெறுப்பா?

அறிவு பசியை அடக்கிவிடும் வயிற்று பசி..
சிறகுகளை ஒடித்து போடும்.. கட்டுபாட்டு கல்விமுறை!

“பிச்சை புகினும் கற்கை நன்றே”
“வறுமையிலும் செம்மை”
“ஏழைக்கோர் எழுத்தறிவித்தல்”.. அறியவேயில்லை..
ஆங்கில வழி நிற்கும் சமூதாயம்

அடிவயிற்று தீக்கு நீர் வார்ப்போம்
மதிப்பெண்ணால்..அளவிடும் கல்விமுறைக்கு
கல்லறை சமைப்போம்
ஏழை பணக்காரன் பிரித்துவிடா..
சமசீர் கல்வி கொடுப்பொம்
எளிதில் புரிந்து கொள்ளும் தாய்மொழிகல்வி தருவோம்

இளம் சிறார்களின் சிறகை வளர்ப்போம்..
அவமான குழந்தைதொழிலாளர் முறை ஒழிப்போம்..!!

மன்னை செந்தில்
"

No comments:

Post a Comment