Friday, 1 March 2013

முழு நிலா..

முழுநிலா ஒளியில்..
நீண்ட மணற்கரையில்..
சலசலத்த நீரின் ஒலியில்..
கேசம் கலைத்த காற்றில்..
உள்ளுறுப்பையும் நடுக்கிய வாடையில்..
மிதக்காமல் மிதந்த மேகப்பொழுதில்..
மின்னாமலே மின்னிய நட்சத்திர மாலையில்..
கொல்லாமல் கொன்றுவிட்டாய் ஒற்றை சொல்லில்
சுட்டெழுப்பிய சூரியன் சொல்லியது..உண்மை யென
கை கழுவிய கண்ணகி சிலையை..
கடக்க அஞ்சுகிறேன் இனும்..
எனை மீறி வழியும் கண்ணீரை..
எவரும் அறிவாரோ என எண்ணி..!!

No comments:

Post a Comment