அன்று ..
நீ ஆற்றங்கரையில்..வீசியெறிந்த..
சோப்பு உறையில்..இன்றும் முகர்கிறேன்..உன் விரல் மணத்தை!!
காய்ந்து..
மணம் போய்விட்டதென நீ தூக்கியெறிந்த ..
மல்லி பூவில்..
மாதம் கழித்தும் போக வில்லை உன் கூந்தல் வாசம்..!!
நீ விட்டெறிந்த ..
மிட்டாயற்ற வெற்று உறைதான்..
ஆயினும்..அதனை சுற்றும் ஆயிரமாயிரம்..
என் காதல்மன எறும்புகள்..!!
நீ வெறுப்புடன்..
விட்டு போன வார் அறுந்த செருப்பு..
வாசனை திரவியங்களுக்கு மத்தியில் ..என் அலமாரியில்!!
இப்படி..
நினைவுகள் போதுமென..
நிஜத்தில் வேறு மணம் முடித்தாய்..
என் மனம் ஒடித்தாய்!!
நீ தொட்ட.. "அஃகிறினை"யெல்லாம்..
மணக்கிறதடி..
உனை தொட்ட என் மனம்?
No comments:
Post a Comment