வண்டினத்திற்கே..
என் மீது கோபம்..
உன் தேனுதட்டு தேனை ஒருமுறை பருகியதால்!
மழை துளிமீது எனக்குண்டு கோபம்..!
பிறகென்ன...
பிறை நெற்றியில் விழுந்து..
கூர் நாசி கடந்து..
திகட்டாதேனுறும் உதட்டை வருடி..
நான் ஸ்பரிசிக்கா தரிசிக்கா..வழிகடந்து..
நாபிகமலத்தில் தேங்கினின்று பரிகசிக்கிறதே!
கார் குழலில் அலைபாய்ந்து..
இனியவளின்..இடைவெளிகாட்டி
கால் நகம் வரை சுதந்திர உலா வரும் ..
காற்றே..
உனக்கும் உண்டு சவால்!!
கனியவள்...அனுமதித்து அணைக்கின்ற வேளையில்..
எங்கள் இடை புகுந்து..
வெளியேறி பார்??!!
No comments:
Post a Comment