சிற் சில ஊடல்களுக்கு பின்...
அழைத்தாய்..
வர சொன்னாய்..
வந்து நின்றேன்..
தொலைபேசினேன்..
கால் மணி காத்திரு என்றாய்..
கால் நாள் கழிந்தது..
கால் வலிக்க ..கைபேசினேன்..
சூல் நிலை அமைய வில்லை என்றாய்..
சூரியன் காணாதகாந்தியாய்..
சுருங்கி போனேன்..மன வலியில்!
தொடர்ந்த சில தினங்கள்...
தொலைபேசவில்லை..
வளர்த்திருந்தேன்..
வைராக்கியம்..தாடியுடன்..
அலைபேசியில்..அழைத்தாய்..
குரலில் தேன் கலந்திருந்தாய்..எப்பொழுதும் போலவே..
வண்டு..வந்தே சேரும்..
என அறிந்தே இருப்பாய்...!
சிலமணிதுளியில் வா என
ஒழுங்கற்ற தோற்றத்துடனே..
ஓடி வந்தேன்..ஓசை எழுப்பிய ஆசையில்..
கையில் புகைப்படம் வைத்திருந்தாய்..
கண்ணாடியில் கவனித்து சொல்..யார் சிறப்பு என்றாய்????
கண்ணாடி சிரித்தது ...பைத்தியம் என்று!
வராதே என சொல்லி..அழைப்பிதல்!!
கை மாற்றிய ...
கடிதங்கள்..கேட்டாய்---
கள்ளி..இப்பொழுதும் தேன் கலந்திருந்தாய்..!!!
கள்ளுண்ட மயக்கமாய்..
அனைத்தும் உன் விருப்பமாய்--
மறு நாள்..
தேவதை போல வந்தாய்!!!
கை மாறின..காதல் சாட்சிகள்..
நினைவுகள் அழிந்தன என்றாய்..
அடி பாவி...
உயிரற்ற பொருள் கை மாற்றி..
உயிர் பறித்து போனாய்..
"மறந்து விடு" முதல் முறை வசியமற்ற உண்மை குரலில்........
வருத்த படுகிறேன்..
"இன்றும்" நிறைவேற்ற முடியாததால்!!!!
No comments:
Post a Comment