நட்புகளே..என் மகனுக்காய் நான் எழுதியது..இன்றும் பலருக்கு பொருந்தும்..
என்ன செய்வேன் நான்..??
சபல எண்ணங்கள்---சட்டைக்குள்
பாச உறவுகள்-- பணத்தினுள்
மனம் நாடும் மனைவி-கனவுகளில்
உற்சாக நட்புகள்-- எதிர்கால சிந்தனையில் என
அனைத்தையும் புதைத்து வைத்தேன்....
உன் அழு குரல் செவியுனுள் விழும் வரை!!
நீ உதைக்காத மார்பு..
நனைக்காத சட்டை..
உனை முத்தமிடா எனுதடுகள்..
உன் சிரிப்பை காணா விழிகள்..
என் கனவுகளுக்காய்..
உனக்கு துரோகம் இழைத்தேன்!
உன் நினைவுகள்..
என் கண்ணீராலும் அழிவதில்லை...
நீ பசித்தால் அழுவாய்..
நான் பார்ப்பதற்காய் அழுகிறேன்..
காய்ந்து விடுவது..கண்ணீர் கோடுள்..
அதை காய விடுவதில்லை உன் நினைவுகள்..
கண்ணீர் வற்றும் வரை தொடரும்..
ஆணந்த கண்ணீர்..
ஆரம்பமாகும் உன் அருகில் நான் வரும் போது..
அந்த நாள்.....???
காத்திருக்கும் உன் அப்பா!
(உனை பொருத்தவரை அன்பிலா)
No comments:
Post a Comment