வறுமை இலாத
வாழ்க்கையால்..
வறண்டு போய் இருக்கும்
என் எழுத்துகள்!!
வறுமையின் வலி
தெரியா என் எழுத்துகள்
வாசமற்ற காகிதபூக்களாய்!!
மனவலியின்
வெளிபாடுகளை எழுத்தாக்கி
வலுவில்லாத எழுத்தாளனாய்
வலம் வருகிறேன்
வழியில்லா காட்டில்
ஒற்றை காலடித்தடத்தை தவறவிட்டு
கால் வலியுடன்
கண்களால் தேடுகிறேன் ஒற்றைத்தடத்தை
வலியிழந்து..
களைப்புடன் கண்ணுற்ற போது..
என் காலடித்தடங்களால்...
பல ஒற்றையடி தடங்கள் வழிகளாய்..
ஒற்றை காலடித் தடத்தை
தேடி- ஒரு நூறு தடம் உருவான
புதிர் வெளிபடும் முன்
ஒற்றையடி வழிகொண்ட காடு மீண்டும்!!!
தெளிவாய்
தடம் தெரிந்தும்..
புதிய தடம் பிறப்பிக்கின்றன
என் காலடித் தடங்கள்
திரும்பிப் பார்க்கிறேன்..
தெளிவில்லாத ஒற்றை காலடி தடம்
என் வலியில்லாத..
எழுத்துகள் போலவே!!
No comments:
Post a Comment