இது என் மகன் பிறக்கும் முன் எழுதிய கவிதை கடிதம்!!
எனது இதயத்தை
நிறுத்தி வைத்திருக்கிறேன்...!
உன் பிஞ்சு கால்கள்
உதைத்து இயங்க வைக்கத்தான்!
என் அழுக்குகளை அகற்றி
வைத்திருப்பேன்....
என் மார்போடு உனை அணைப்பதற்காய்!
சோப்புகள் இலாத குளியல்தான்...
உனது பன்னீர் அபிஷேகம்
பெறுவதற்காய்...!
அம்மாவிற்கு மஞ்சளும்..
எனக்கு சந்தனமும்..
வாங்க போவதில்லை..
நீ தருவதற்காய் காத்திருக்கும்
அப்பா!
No comments:
Post a Comment