வருடத்தின் ஒரு மழை நாள்
ஒரே மழை நாள்
அனுபவிக்க ஆசையாய்
விட்டு விட்டு சொட்டு சொட்டாய்
இமை மூடி ரசித்த வேளையில்
வெறுப்புற்று .. அறை ஒதுங்கினேன்
எனை நனைத்திட்ட ஒவ்வொரு துளியும்
உன் கரம்பிடித்து நனைந்திட்ட நினைவில் நனைக்கிறது!
நித்திரை தின்று
நிதம் வளர்கிறது உன் நினைவுகள்
நீர் அணைக்க இயலா தீ போல
நீரே ஊற்றவில்லை.. வளர்கிறது
பாலைவன மரமாய்
எனை கொன்று வளர்கிறது உன் காதல்
போடி.. என் இமைகள் விட்டு
உறங்கிய பின் வந்துவிடுவாய்தானே கனவில்!!!??
பதின் மணிதுளிகள்
கடந்தும் உறக்கம் பிடிக்கவில்லை
உரையாடி கொண்டிருந்தேன்
உரையாடல் வழி.. தாலாட்டினாய்
உறங்கி போனேன்..
மறந்துதான் போகிறேன்
அங்கு பன்னிரண்டு என்பதினை!!
உன் கனவில் நான் வரப்போவதில்லை
உந்தன் சிறு ஓய்வு
சிதைக்கப்படும் என் சேவைதனில்
ஒரே மழை நாள்
அனுபவிக்க ஆசையாய்
விட்டு விட்டு சொட்டு சொட்டாய்
இமை மூடி ரசித்த வேளையில்
வெறுப்புற்று .. அறை ஒதுங்கினேன்
எனை நனைத்திட்ட ஒவ்வொரு துளியும்
உன் கரம்பிடித்து நனைந்திட்ட நினைவில் நனைக்கிறது!
நித்திரை தின்று
நிதம் வளர்கிறது உன் நினைவுகள்
நீர் அணைக்க இயலா தீ போல
நீரே ஊற்றவில்லை.. வளர்கிறது
பாலைவன மரமாய்
எனை கொன்று வளர்கிறது உன் காதல்
போடி.. என் இமைகள் விட்டு
உறங்கிய பின் வந்துவிடுவாய்தானே கனவில்!!!??
பதின் மணிதுளிகள்
கடந்தும் உறக்கம் பிடிக்கவில்லை
உரையாடி கொண்டிருந்தேன்
உரையாடல் வழி.. தாலாட்டினாய்
உறங்கி போனேன்..
மறந்துதான் போகிறேன்
அங்கு பன்னிரண்டு என்பதினை!!
உன் கனவில் நான் வரப்போவதில்லை
உந்தன் சிறு ஓய்வு
சிதைக்கப்படும் என் சேவைதனில்
No comments:
Post a Comment