Tuesday, 20 November 2012

பொய் முகங்கள்

பொய்களை புணைவது என்பது..
எழுத்தில் மட்டுமல்ல ..
பேச்சில் மட்டுமல்ல
ஏன் வாழ்க்கையே கூட
யாருமற்ற அறையில் கண்ணாடி முன் கூட 
அங்கு முகமுண்டு அகமில்லை
விடியலில் கரையும் இருட்டு..
அலசலில் கரையும் அழுக்கு
ஆனால்
வெளிச்சத்தில் வளரும் நிழலிருட்டு போல 
வளர வளர வளரும் புணைகள்!!

எளிதில் முடிகிறது..
பொய்முகமூடியணிந்து புன்னகைக்க
ஏனோ முடியாமலே போகிறது
பொய் முகத்தை துகிலுறிக்க
அதற்கு முதலில் என்முகமதை அணியவேண்டுமே??

No comments:

Post a Comment