Saturday, 22 January 2011

காதல் கிறுக்கு!

பல பக்கம் நிரப்பும் வசனங்களை..வாளாவியிருந்தேன்..
பல மணி நேரம்..கதைத்திருப்பேன்..
என் மனதை மொழிபெயற்கா வார்த்தைகளை!!
இதோ..இனி..
என் "பேசா மௌனமாவது"..மொழி பெயற்கட்டும்
அவள் என் மனமறியட்டும்!!!!!

சூரியனை நோக்கும் காந்தி
சந்திரனால் மலரும் அல்லி
என்பது இயற்கையின் விதி..
விதி விலக்காய்..
நீ வருகையில் திசை மாறியது காந்தி பூ
பகலில் மலருது அல்லி!!!
நான் மாறியது அதனாலோ உன் கண்ணுக்கு தெரியவில்லை!!

கவிதை கிறுக்கில்..
சிந்தித்து..சிந்தித்து..கசங்கியது மனது!
கடைசியில்..வழக்கம் போல
அவளது பெயரை மட்டும் எழுதிவைத்தேன்!!

பகலும் இரவும்..
மாறி மாறிதான் வருகிறது..
எக்காலமும் மாற மறுக்கிறது உன் நினைவு!!

No comments:

Post a Comment