விடியலின் .. வேளை
சூரிய உதயம்
பிறை நெற்றியில்.. வட்ட குங்கும பொட்டாய்
முன் பனி காலை..
புல் வெளி பனிதுளி
உன் இதழ் நீங்கா வியர்வைதுளி
கார்கால மேக கூட்டம்
தோளும் இடையும் கூட்டும் கூந்தல் காலம்
நிலம் வறண்ட கோடை
ஒன்றிரண்டு வெடிப்புள்ள பாதப் பிரதியாய்
மரம் குளிக்கும் மழை மாலைகள்..
கூந்தல் வழிந்திட்ட குற்றால அருவி நிலை
தொட்டசினுங்கி சுருங்கும் ..
முன் மாலை பொழுது
இமை நெற்றி சுருங்கும் சிந்தனை வேளைகள்
குயில்கள் குக்கூவிடும் வசந்தம்..
உன் நிலை கண்ணாடி அறியும்
கூந்தலுடன் பிறந்திட்ட கானங்களை
இயற்கையுடன் இயைந்திட்ட இவளை
இறக்கும் முன் மறக்கப்போவதில்லை
நான் இறக்கும் முன் அவள் எனை நினைக்கப்போவதுமில்லை!!!
No comments:
Post a Comment