Wednesday, 15 February 2012

அவளாலே..

தூக்கம் வரா இரவுகளில் வந்த கவிதைகளை விட
தூங்கும் கணத்தில் நீ கனவில் கலைத்த பின்
கிறுக்கும் வரிகளில் மிக அழகாய் ஒளிந்திருப்பாய் நீ
ஏதோ குறையுடைய ஓவியம் போலவே
முழுமையாய் நீ வராத கனவால் கலையும் தூக்கத்தை
ஈடு செய்ய முயலும்.. சின்ன கவிதைகள்
முழுமையடையாமல் .. என் கனவை போலவே
விரும்பும் நேரத்தில வர மறுக்கும் கனவை போலவே
சில சமயம் கவிதையும்.. தொடர்பின்றி
என் கனவையும்.. கவிதையும் கட்டி போட்டவள் நீ!

மெதுவாய் மிக மெதுவாய்..
உள் நுழைந்து வெகு சீக்கிரமே ஆக்ரமித்துவிட்ட உன் நினைவுகளே..
விரட்டுவது போல் நடித்து கொண்டிருக்கிறேன்
சில கவனக்குறைவுக்கு காரணமாகிவிட்ட
நினைவெனும் சுமையை இறக்கிவிட எத்தினிக்காமல்
சுமையுடன் ஓட முயல்கிறேன்.. கழுதை போலே
ஆனாலும் சுகமாகத்தான் இருக்கிறது. நினைவு சுமைகள்!

No comments:

Post a Comment