Thursday, 16 February 2012

யாருக்கும் தெரியாமலே.....

எந்த மரம்..

தருகிறெதென்று தெரியவில்லை

எனக்கான மூச்சு காற்றை..

யார் நெய்வார்கள்

எனக்கான சட்டையை

யார் நட்ட மரமோ

என்னுள் போன பழத்திற்கு

விதைத்தவனையும்..

அறுத்தவனையும் தெரிவிக்கவில்லை

நான் கொண்ட நெல் மணிகள்

பிடித்தவனின்..

பெயர் பொறிக்கபடவில்லை

பதப்படுத்திய மீனில்

மூச்சடக்கியவன்

பெயர் தெரியாது..

முத்து மாலையில்

வீணையின் ஸ்வரமும் ..

மீட்டுபவரும் அறியவில்லை

செய்தவன் பெயரை..

இசைகள் சொல்லப்போவதேயில்லை

புல்லாங்குழல் தந்திட்ட மூங்கிலை பற்றியும்

செய்திட்ட கைகளை பற்றியும்..

பியொனா..

வாசிக்கின்ற விரல்களுக்குதான் மரியாதை

செய்திட்ட கரங்களுக்கு இல்லை

நிழல்கள் நேசிக்கப்படும்

நிஜங்களோ நசுக்கப்படும்

உருவாக்கும் விரல்களுக்கு

தேவையெல்லாம் ஒரு கவளம்தான்

No comments:

Post a Comment