Wednesday, 23 January 2013

மௌனமழை...

சிறு தூறல் மழையா..
பெரு வெள்ள அடை மழையோ..
தெரிவதே இல்லை...
கரு மேகம்.. பொழியும் வரை!

கட்டுக்கடங்கா அன்பா..
காட்ட முடியாத வெறுப்போ..
விளங்க முடியா..
உன் மௌனம்!!!

என் வார்த்தைகள்..
வட்டிக்கு வாங்கும் ஏழையாய்..

உன் மௌனம்.. 
குபேரன் பேழையாய்.. கணக்கிலடங்கா

புயல் காற்று வெள்ளத்தில்..
ஆல மரம்.. பிழைத்திருக்கும்..
நாணலும் ..பிழைத்திருக்கும்..

நானோ
தனியே நிற்கும் தென்னைமரம்..
எனக்கு முட்டு கொடுப்பதெல்லாம்.. வாழை கன்றுகள்

சீக்கிரம் பெய்துவிட்டு போ..
சிந்திப்பதை விட.. அதனை சந்திப்பதே மேல்!!!

No comments:

Post a Comment