Wednesday, 29 December 2010

ஒரு நாளில் உதிரும் பூக்கள்..

இயற்கையாகவோ..மனிதம் மரத்த மனிதர்களின் கள்ளி பாலுக்கும் இரையாகும்

உயிர் பூக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

வாழ்ந்த நிமிடங்களை

வருடங்களாய் கணக்கிட்டு

காலன் கை கொண்டானோ!

பாழும் மனிதர்களுக்கிடையே

பந்தாடப்படுவாய் என்றெண்ணி

பாசம் கொண்டு பாசக்கயிறு வீசினானோ!

பத்து மாதம் கண்ட கனவுகளுக்கு

பரிசாய்...

ஒரு நாள் மட்டும் உயிர் கொடுத்தானோ!

மலர்ந்த உடன்..

காலன் பறிக்கும்.. மலரே

நீ இறைவன் காலடியிலே இரு!!

2000ம் வருடத்தில் என் உடன் பணிபுரிந்தவர் தன் குழந்தையை இழந்து..இக் கவிதைக்கு காரணமானார்!!


No comments:

Post a Comment