Thursday, 30 December 2010

//ஈழம் மலர்ந்தே தீரும் // சிந்தனை

//ஈழம் மலர்ந்தே தீரும் // சிந்தனை

மனித எண்ணங்கள் (சிந்தனை)ஒரே புள்ளியில் குவிந்தால் அது நடந்தே தீரும் என்கிறார்கள் வல்லுனர்கள்!! தமிழர் நாம் அனைவரும்

புது ஆண்டு தொடக்கம் முதல்..''காலையில் விழித்தெழும் போதும்''

''இரவு உறங்கும் முன்னும்''..//ஈழம் மலர்ந்தே தீரும்// என எண்ணுவோம் .வெறும் 10 + 10 20 வினாடிகளை செலவிடுவோம், நமது எண்ண ஓட்டதில்..சில கோடி தமிழர்களின் எண்ண அலைவரிசை அமைத்து பார்ப்போம்! நட்புகளே வாருங்கள்,நம் இன கருவழித்த கயவர்களின்.. கனவழிப்போம்! எழுந்து நிற்போம்!

மற்றவரை அழித்தல் நம் நோக்கமல்ல..''வாழ்தல்'' அது போதும்!!

செலவிடுவோம்..சில மணித்துளிகளை! உங்கள் ஆதரவு வேண்டும்

இது நடக்குமா? அறிவீனமோ? நான் அறியேன்..

ஆனால்..இஸ்ரேல் உருவாக ஒட்டு மொத்த அவர்களின் ஆசையும் ஒரு காரணம் என் நம்புகிறேன்.

சில நிமிடங்கள்தானே என்னால் செலவழிக்க முடியும். இந்தியாவில் பிறந்து.. உணர்வு குறைந்த தமிழனாய் வாழும் குற்ற உணர்ச்சி குறையவாவது..இதை செய்ய விழைகிறேன்.

''எண்ணம் ஏற்றம் தரும்'' என்பது உண்மையானால்..உணர்வுபூர்வமாய் எண்ணுவோம்..

//ஈழம் மலர்ந்தே தீரும் என//

உங்களின் சில மணிதுளிகளை யாசிக்கும்

செந்தில் முருகன்.

No comments:

Post a Comment