Thursday, 16 December 2010

சினிமாவும்.. சிறுநாயகிகளும்

சாதி பேதமில்லை

மதவெறி இல்லை

ஆனாலும் ஒரு மார்க்கம்!

கற்பனையும்..

கனவுகளும்..

நம்பிக்கையும்..மூலதனம்

அப்துல்கலாமின்

வாக்கு .. பொய்க்கும் இடம்!

ஆயிரமோர் ஆயிரம்

கனவுகள் நிதம் நிதம்..!

பலிதமோ..வெகு சில

வீட்டு நிழற்கண்ணாடி..

அழகென்று உரைத்தால்..

இனுமொரு ஜோடிக்கால்கள்

தேயும்..வாய்ப்பிற்காக!

கதா நாயகி..

கவனிக்கப்பட வேண்டி..

தார் பூசி நிற்கும் துணை நடிகைகள்..

வாழ்க்கையிலும் நிஜ நடிகைகள்..!

கவர்ச்சி உடை..நாயகி

ப்ரேக் டைம் கேரவனில்..

இவர்களோ..

அதே துண்டு உடையுடன் நாள் முழுதும்..

உடல் மறைக்க முடியாது..

ஆனால்

பசி மறைத்து..

உணர்ச்சி மரத்து..

வேடிக்கையல்ல

இவர்கள் வாழ்க்கை...!

கற்பாடை கழற்றிவிட்டு..

அட்ஜஸ்மென்ட் ஆடையணிந்து..

வாய்ப்பு கதவை தட்டும்..

அவலம் கதா நாயகிக்கு மட்டுமல்ல

சில நேரம் இவர்களுக்கும்!!

No comments:

Post a Comment