பூமிப் பெண்ணை..
மழைதுளியால் முத்தமிட
ஆவேசமாய் காத்திருக்கும் கருமை வானம்!
வானவனின்
ஆவேசத்தை தணிக்க..
வருடிவிடும் விதமாய் காற்று!
நனைந்தேன்...
நடந்தேன்..
நாசியில் மண் வாசம்!
பலமாக காற்று..
பரிதவித்து போனேன்..
பளீர் மின்னலாய் அவள்!
கையில் குடையுடன்..
காட்டன் புடவையில்..
தேவதை..என் கனவு தேவதை!!
அலை பாய்ந்தது கண்கள்..
ஆவேசமாய் காற்று..
அவஸ்தையில் அவள்..
அட்டூழியம் செய்தது-காற்று
அடங்காத குடை
மறைக்க முடியாமல் மேலாடை!!
அடங்காத மேலாடையால்
அவஸ்தையில் அவள்
அடக்க நினைத்தும் முடியாமல் நான்-கண்களை!
பளீர் மின்னல்கள்
பலரின் கண்கள்
பாய்ந்து சென்று அடக்கினேன்-குடையை!
நீர் வழிய
கண் நீர் வழிய -அவள்
காதலாய் உருகி நான்!
ஏங்குகிறேன் மீண்டும் ஒரு சூறை காற்றுக்கு!!
No comments:
Post a Comment