அதிகாலையில்..
தாகம் தனிக்கும் நீர் குடத்துடன்
கதிரவன் மகளாய் ஒருத்தி..!
கதிரவன் வந்த பின்னும்
சந்திரன் உதிக்கும் கண்கள்..
அதனில் என் கண்கள்!!
நான் கண்ணோடு கண் நோக்கிய போதும்..
அவளோ..
இடக்கையால் இடைவெளி பிரேதேசத்தை
மறைக்க முயன்றவளாய்!!??
அவள் கை தொடர்ந்த என் கண்கள்
அபாய வளைவுகளில் பயணித்து
தாகமாய் அவள் கண்களை நோக்கி
மீண்டும்....
இம்முறையோ..
சரியாத மேலாடையை சரி செய்து..
என்னை! கண்ணை!
அபாய பயணம் மேற்கொள்ள செய்தாள்..
மேடுகளையும் வளைவையும்
கடினமாய் கடந்து..
மீண்டும் அவள் கண் நோக்க....!
இம்முறை நேராய் என் கண் சந்தித்தாள்......
அப்பப்பா....!!!
மேடுகள் வளைவுகள் பயணமே..
பரவாயில்லை
No comments:
Post a Comment